Wednesday 31 July 2013

கருமி


( இது  17 ஆம்  நூற்றாண்டு  பிரஞ்சு  நகைச்  சுவை  நாடக  ஆசிரியர்  மொலிஏரின் - Moliere - புகழ் பெற்ற  படைப்பு. இதன்  கதை  தமிழ்த்  திரைப்படமாய்கஞ்சன்  என்னும்  தலைப்பில்  சுமார்  65  ஆண்டுக்குமுன்பு  வெளிவந்தது. 

இரு  காட்சிகளை  மூலத்திலிருந்து  மொழிபெயர்த்துள்ளேன்)
                            
பாத்திரங்கள்:
                                                
அர்ப்பாகோன் ---  பெருஞ்  செல்வர், கடைந்தெடுத்த  கருமி.  தோட்டத்தில்  பணத்தைக்  கமுக்கமாய்ப்  புதைத்து  வைத்துவிட்டுஅது  திருட்டுப்  போய்விடுமோ  என்ற  நிரந்தர  அச்சத்தில்  நடுங்குபவர்.
லாஃளேஷ் ---  அவருடைய  மகனின்  வேலையாள்.

அங்கம்-1  -  காட்சி-3

அர்ப்பாகோன்--- சீக்கிரம்  போ   வெளியே!   பதில்  பேசக்  கூடாது.   என்  வீட்டிலிருந்து  ஓடிவிடு,    ஒண்ணாம்  நம்பர்  திருடா!

லாஃளேஷ்   ---  (தனக்குள்)   இந்த  மோசமான கிழவரைப்  போல  வேறு  யாரையும்    நான்  ஒருபோதும்   பார்த்ததில்லை;    பேய்தான்  இவர்.

அர்ப்பாகோன் --- என்ன   முணுமுணுக்கிறாய்?

லாஃளேஷ்   -- எதற்காக   என்னை   விரட்டுகிறீர்கள்?

அர்ப்பாகோன்--- என்னிடம்   காரணம்  கேட்க    நீ  யார்?   சீக்கிரம்  வெளியேறு,   உதை  வாங்குவதற்குமுன்.

லாஃளேஷ்   --- உங்களுக்கு  நான்    என்ன  செய்தேன்?

அர்ப்பாகோன் --- உன்னை   வெளியேற்றுவதற்குத்     தக்கதைச்    செய்தாய்.

லாஃளேஷ்   உங்கள்  மகன்என்  எஜமான்,   அவருக்காகக்  காத்திருக்கும்படி   எனக்கு  உத்தரவு  போட்டிருக்கிறார்.

அர்ப்பாகோன்---  வெளியில்  போய்க்  காத்திரு,   என்  வீட்டில்  இருக்காதே!    கம்பம்  மாதிரி  நின்றுகொண்டு,   இங்கே  நடக்கிறதைக்  கவனிக்கிறதும்   ஆதாயம்  தேடுவதும் .  என்  எதிரில்   நான்  நிரந்தரமாக  வைத்திருக்க  விரும்பவில்லை,    என்னுடைய செய்கைகளைப்  பார்க்கிற   ஓர்  உளவாளியை,    தன்  துஷ்டக்  கண்களால்   என்  எல்லா  வேலைகளையும்   நோக்குகிற,    நான்  வைத்திருப்பதை  நோட்டமிடுகிறஅபகரிக்க   எதுவாவது  கிடைக்குமா என்று    அக்கம்பக்கம்  துருவுகிற   ஒரு  துரோகியை.

லாஃளேஷ்   ---  வேடிக்கைதான்!   உங்களிடம்  திருடுவதா?  எல்லாவற்றையும்    மூடி  மறைத்துக்கொண்டு,    இரவும்  பகலும்   காவல்  காக்கிற   நீங்கள் திருடப்படக்கூடியவரா?


அர்ப்பாகோன் ---  எனக்கு  மதிப்பு  உடையதாய்த்  தோன்றுவதை   மறைத்து  வைக்கவும்    என்  இஷ்டப்படி   காவல்  காக்கவும்   நான்  விரும்புகிறேன்.    பிறர்  செய்வதைக்  கவனிக்கிற  காவல்  உளவாளியா  நீ?   ( தனக்குள்):   என்  பணத்தைப்  பற்றி  ஏதாவது  சந்தேகப்படுகிறானோ   என  நடுங்குகிறேன்.   (உரத்து):   நான்  பணத்தை  ஒளித்து  வைத்திருப்பதாக  ஊரெங்கும்  போய்    வதந்தி  பரப்பக்கூடிய  ஆளாக   நீ  இருக்கமாட்டாயா,    என்ன?

லாஃளேஷ்  ---  பணம்  ஒளித்து  வைத்திருக்கிறீர்களா?

அர்ப்பாகோன் --  இல்லைநான்  அப்படிச்  சொல்லவில்லை.  அந்த  மாதிரி  வதந்தியை விஷமத்தனமாய்ப்    பரப்பமாட்டாயா    என்றுதான்  கேட்கிறேன்.

லாஃளேஷ் ---  நீங்கள்   பணம்    வைத்திருந்தால்   என்ன,   இல்லாவிட்டால்  என்ன? எனக்கு    அது  முக்கியமா,   என்னைப்  பொருத்தவரை    இரண்டும்  ஒன்றுதான்  என்கிறபோது?

அர்ப்பாகோன் --  தர்க்கம்  செய்கிறாயா?   பதில்  கொடுப்பேன்கன்னத்தில் .    வெளியே  போ,    மறுபடியும்  சொல்கிறேன்.

லாஃளேஷ்  --  சரிபோகிறேன்.

அர்ப்பாகோன் ---நில்லு.    எதையும்    எடுத்துப்  போகவில்லையே?

லாஃளேஷ்  --  என்னத்தை  எடுத்துப்  போவேன்?

அர்ப்பாகோன் --  வா  இங்கே.  கையைக்  காட்டு.

லாஃளேஷ்  --  இதோ.

அர்ப்பாகோன் --  அந்தக்  கை?

லாஃளேஷ்  -- உம்.

அர்ப்பாகோன் --உள்ளே  ஏதாவது  வைத்திருக்கிறாயா?

லாஃளேஷ் -- நீங்களே  பாருங்கள்.

                (அர்ப்பாகோன்  தடவிப்  பார்க்கிறார்)

லாஃளேஷ்  --  (  (( ((((9 (((தாழ்  குரலில்)    ஆ!  இவரைப்  போன்ற  ஆள்கள்    பயப்படுவது  நடக்குமானால்   பொருத்தமாக  இருக்கும்;    இவரிடம்  திருடினால்    எவ்வளவு  மகிழ்ச்சி  ஏற்படும்!

அர்ப்பாகோன் --  என்னது?

லாஃளேஷ்  -- எது?
அர்ப்பாகோன்-- திருடுவது  பற்றி  என்ன  சொன்னாய்?

லாஃளேஷ்  --  நான்   திருடி  இருக்கிறேனா   என்று   எங்கும்    துருவிப்  பார்க்கிறீர்கள்  என்றேன்.

அர்ப்பாகோன் --  ஆமாம்அப்படித்தான்  செய்கிறேன் .

லாஃளேஷ் -- (தனக்குள்):  கருமித்தனத்தையும்     கருமிகளையும்      ப்ளேக்  நோய்  கொண்டு  போக!

அர்ப்பாகோன் -  என்ன  சொன்னாய்  கருமிகளைப்  பற்றி?

லாஃளேஷ்  --  கொள்ளை  நோய்   கொண்டுபோக   என்றேன்.

அர்ப்பாகோன் -- யாரைப்  பற்றி     அப்படிச்  சொன்னாய்?

லாஃளேஷ்   ---கருமிகளைப்  பற்றி.

அர்ப்பாகோன்  -- யார்  அந்தக்  கருமிகள்?

லாஃளேஷ்  -- கேடு  கெட்ட  மனிதர்கள்.

அர்ப்பாகோன் --யாரை  மனத்தில்  வைத்துப்  பேசினாய்?

லாஃளேஷ்  -- உங்களைப்  பற்றிச்  சொன்னதாய்    நினைக்கிறீர்களா?

அர்ப்பாகோன்-- சரிபோய்த்  தொலை.

                                                                      ( தொடரும்)
                     ++++++++++++++++++


Sunday 28 July 2013

அற்புதச் சிகிச்சை - காட்சி 6

                                            
                                  பாத்திரங்கள் :

ஸ்கானாரேல்    -   தந்தை
லிசேத்து             -  வேலைக்காரி .

         
 அற்புதச்  சிகிச்சை    -      காட்சி   6                         
                                                  
லிசேத்து   -  ஐயோதுன்பம்!    அந்தோதுர்ப்பாக்கியம்!    பாவம்எஜமானர்அவரை    எங்கே   நான்  பார்க்க  முடியும்?

ஸ்கானாரேல்  என்ன  சொல்கிறாள்,     அவள்?

லிசேத்து  ,    பரிதாபத்துக்குரிய  தந்தையே!     இந்தச்  செய்தியை     நீங்கள்  கேட்டால்  என்ன  செய்வீர்களோ?

ஸ்கானாரேல்  என்னவாக  இருக்கும்?

லிசேத்து  இரக்கத்துக்குரிய    என்  எஜமானியே!  

ஸ்கானாரேல்  தொலைந்தேன்.

லிசேத்து  ஐயா

ஸ்கானாரேல்  லிசேத்!

 லிசேத்து  எவ்வளவு    துரதிர்ஷ்டம்!

ஸ்கானாரேல்  லிசேத்

லிசேத்து  விதி .

ஸ்கானாரேல்  சொல்லு     விவரமாய்.

லிசேத்து  - உங்கள்  மகள்!

ஸ்கானாரேல்  ஐயோஐயோ!     ( அழுகிறார்

லிசேத்து  அழாதீர்கள்,    ஐயா!

ஸ்கானாரேல்  சொல்லேன்,    சீக்கிரம்

லிசேத்து  உங்கள்  மகள்,    நீங்கள்  அவளிடம்  பேசிய  பேச்சாலும்    நீங்கள்  காட்டிய  பயங்கரக்  கோபத்தாலும்    பாதிப்பு  அடைந்து ,    அவசரமாய்த்  தன்  அறைக்குப்  போய்,    நம்பிக்கையை  அறவே  இழந்த  நிலையில்,     ஆற்றுப்  பக்கம்  உள்ள  சன்னலைத்  திறந்து  ...

ஸ்கானாரேல்  அப்புறம்?

லிசேத்து  விண்ணை  நோக்கிக்  கண்ணை  உயர்த்தி,  "முடியாது,    அப்பாவின்  கோபத்தைத்  தாங்கி  வாழ   என்னால்  இயலாது;    என்னை  அவர்    மகளல்ல  என்று மறுதலிப்பதால்    சாக  விரும்புகிறேன்"    எனக்  கூறினார்கள்.

ஸ்கானாரேல்  குதித்துவிட்டாளா?

லிசேத்து  இல்லைஐயா;    மெதுவாகச்  சன்னலை  மூடிவிட்டுக்    கட்டிலில்  போய்ப்  படுத்துக்கொண்டு    அழத்  தொடங்கினார்கள்.     திடீர்  என    முகம்  வெளுத்தது, மூர்ச்சை  அடைந்து    என்  கைகளில்    சாய்ந்துவிட்டார்கள்.

ஸ்கானாரேல்  மகளே!

லிசேத்து  அசைத்து  உலுக்கி   நினைவுக்குக்  கொண்டுவந்தேன்;     ஆனால்  அவ்வப்போது  அதே  நிலைமை  திரும்புகிறது.     பகலைத் தாண்ட  மாட்டார்கள்  ஏன்று  நினைக்கிறேன்.

ஸ்கானாரேல்  சீக்கிரம்டாக்டர்களைக்  கூப்பிடு;   இந்த  மாதிரி  ஆபத்தில்  எத்தனை  பேர்  இருந்தாலும்    அதிகமல்ல.   அய்யோ  மகளே!   அருமை  மகளே!

        ( மருத்துவர்களுள்  ஒருவனாய்க்    காதலனையும்  வரவழைக்கிறாள்      லிசேத்.    மற்றவர்களுடைய  முயற்சியால்  நீக்க  முடியாத  நோயைக்  காதலனுடைய   "அற்புதச் சிகிச்சை"    குணமாக்குகிறது.      காதல்  மணத்துக்கு  ஸ்கானாரேலை  இணங்க  வைத்துவிடுகிறார்கள்.)

                                   (முடிந்தது)               
                                    +++++++++++++++++++++++