எனது 96-ஆம் வயது இன்று (11-02-2021) தொடங்குகிறது.
12-ஆம் அகவையில் என்னைப் பிடித்த வாசிப்புப் பழக்கம்
இன்னமும் தொய்வின்றித் தொடர்ந்து கொண்டிருப்பதால் பல முதியோர்களைப் போல் பொழுது போகவில்லை
என்று நான் புலம்பத் தேவை யேற்படவில்லை. இது
என் நற்பேறு.
சென்ற
ஆண்டு நின்றுவிட்ட இலக்கியச் சாரல் இனிப் பெய்யும்; பருவ நிலை சாதகமாக அமையும் காலங்களில்
மட்டுமே.
****