Thursday, 4 December 2014

தாட்சண்யம்

            
(18 ஆம் நூற்றாண்டுப் பிரஞ்சு எழுத்தாளர் ருசோ பற்றித் தமிழ் வாசகர்கள் அறிந்திருப்பார்கள்; அவரது முழுப் பெயர் ழான் ழாக் ருசோ.பிரான்சில் 1789 இல் நிகழ்ந்த மாபெரும் புரட்சிக்கு அவரது எழுத்துகள் முக்கிய உந்துதல் .. அவர் தம் வரலாற்றை எழுதியுள்ளார்;  தம்முடைய தப்புத் தவறுகளையும் ஒளிவு மறைவு இன்றித் தெரிவித்திருக்கிறார். அதிலிருந்து மொழிபெயர்த்த ஒரு சிறு பகுதி.

15 ஆம் வயதில், உலோகத்தில் எழுத்து செதுக்கும் வேலையை அவர் கற்றுக்கொண்டிருந்த போது நடந்த நிகழ்ச்சி.

 எஸ்பெரேகஸ் - சமைத்து உண்ணும் ஒரு கறிகாய்)



 என் குருவுக்குத் தோழர் ஒருவர் உண்டு; பெயர் வெரா. அருகில் இருந்த அவரது வீட்டுக்கும் அதன் தோட்டத்துக்கும் கொஞ்சம் தொலைவு.அதில் மிக அழகிய எஸ்ப்பெரேகஸ் (asparagus) விளைந்தது.

 பணப் பற்றாக்குறை உள்ள வெராவுக்கு ஓர் ஆசை தோன்றியது: தம் தாயாருக்குத் தெரியாமல் எஸ்ப்பெரேகசைத் திருடி விற்றுக் கிடைக்கும் தொகையில் நல்ல உணவகச் சாப்பாடு உண்ண விழைந்தார். தமக்குச் சாமர்த்தியம் குறைவு என்பதாலும் தாம் மாட்டிக்கொள்ள விரும்பாமையாலும் அந்த வேலைக்கு என்னைத் தேர்ந்தெடுத்தார்.

 அவரது புகழுரை என்னை மயக்கிற்று; புகழ்ச்சியின் உள்நோக்கம் தெரியாமையால் எளிதில் வசப்பட்டேன். திடீர் எனத் தோன்றிய எண்ணம்போல் அதைத் தெரிவித்தார். மறுத்தேன், வற்புறுத்தினார். புகழ்ச்சிக்கு இரையாவது என் பலவீனம்: ஒப்பினேன்.

  நாள்தோறும் காலை வேளைகளில் நான் போய் நன்கு வளர்ந்த எஸ்பெரேசுகளை அறுவடை செய்து மொலார் என்ற இடத்துக்குக் கொண்டுசென்று ஒரு பெண்ணிடம் விற்றேன்; திருடியது என்பதைப் புரிந்துகொண்ட அவள், அதை என்னிடம் வெளிப்படுத்தினாள் குறைவான விலை தருவதற்காக. எனக்கேற்பட்ட அச்சத்தில் அவள் அளிக்க விரும்பியதைப் பெற்றுக்கொண்டேன்.

  வெராவிடம் கொடுத்தேன்; அது உடனடியாய்ச் சாப்பாடாக மாறியது. வழங்கியவன் நான் என்றாலும் அவருடன் உண்டவன் வேறொரு தோழன்; உணவில் சிறிதளவே எனக்குப் பெரு மகிழ்ச்சி யூட்டப் போதுமானதாய் இருந்தது. அவர்களின் சாராயத்தை நான் தொட்டதுகூட இல்லை.

 அந்தச் சிறு திருட்டு, பல நாள் தொடர்ந்தது. அவரது சொந்தச் சரக்கின் விலையை அவரிடமிருந்து வரியாக வசூலித்து, திருடரையே திருடவேண்டும் என்னும் எண்ணம்கூட உதிக்காமலே, மிக அதிக விஸ்வாசத்துடன், அந் நேர்மை யற்ற செயலைச் செய்துவந்தேன். என் ஒரே நோக்கம் அதைச் செய்யத் தூண்டியவருக்கு உதவுதல் மாத்திரமே.

  நான் ஒரு வேளை மாட்டியிருந்தால், எத்தனை அடிகள், எத்தனை வசவுகள், எவ்வளவு கொடூரமான தண்டனைகள அனுபவித்திருப்பேன்! அப்போது அந்த மோசமான ஆளைக் காட்டிக் கொடுத்திருந்தால், அவர் , மறுத்திருப்பார், அவரை முழுதும் நம்பியிருப்பார்கள்; நான் பொய்யன் ஆவதோடு, அவர்மீது குற்றம் சுமத்தியதற்கு இரட்டிப்புத் தண்டனையும் கிடைத்திருக்கும்; ஏனெனில் அவர் தோழர், நான் கற்றுக்குட்டி.

 வலுவில்லா நிரபராதி சிக்குவான், பலமுள்ள குற்றவாளி தப்புவான் என்பது நிரந்தர நியதி..
              ====================



Saturday, 8 November 2014

ஒரு கருமி பற்றிய குட்டிக் கதை

 ஒரு  கருமி  பற்றிய  குட்டிக்  கதை 
நான்  சிறு  வயதில்  படித்தது  




    அடிப்படைத்  தேவைகளுக்குக்கூட   செலவு  செய்யாமல்  கஞ்சனாக  இருப்பது  தவறு.   ஆயினும்   சிலர்   அப்படித்தான்  வாழ்கின்றனர்.

    ஒரு  பேர்பெற்ற  கருமி   தற்செயலாய்ப்   பூனைக்  குட்டி யொன்றைக்  கொன்றுவிட்டான்அது  பெரும்   பாவம்  என்பது  நம்பிக்கை  யல்லவாஅதனால்    நரகத்தில்  உழல   நேருமே  என்றெண்ணிக்    கவலை  கொண்டான்.

   எல்லாப் பாவங்களுக்கும்  பரிகாரம் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்களேஇதற்கு   இல்லாமலா  போகும் என  நினைத்து   ஒரு  புரோகிதரை  அணுகி,

  "ஐயாஒரு  பூனைக்   குட்டி  சாக  நான்   காரணமாய்  இருந்துவிட்டேன்கொல்வது  என்   நோக்கமல்ல;   இருந்தாலும்    அது  பாவந்தான்  என்று  நம்புகிறேன் .   என்ன  பரிகாரம்    செய்ய  வேண்டும்     என்பதைச்  சொல்லுங்கள்”  என்று  கேட்டான்.  

அகப்பட்டான்  ஒருவன்    என்று  மகிழ்ந்த   அவர் , " பசுவைக்  கொல்வது   எவ்வளவு  பாவமோ   அவ்வளவு  பாவம்  பூனையைக்  கொல்வதும்   என்று  சாஸ்திரம்   சொல்லுகிறது ;   அதைப்  போக்குவதற்கு   வழியையும்  காட்டுகிறதுஎன்று  பதில்  அளித்தார்.  

   ---   அதைச்  சொல்லுங்கள்  என்றுதான்  கேட்கிறேன்.

   ----  தங்கத்தால்   பூனை   செய்து  எனக்குத்  தானம்  கொடுத்தாயானால் ,
பாவம்  நீங்கிவிடும்.

    ----  தங்கமாஐயோஅவ்வளவு  பணம்   என்னிடம்   இல்லையே!

   ----   அப்படி   யென்றால்வெள்ளிச்  சிலை    கொடு.

    ----  அதற்கும்  வழி  இல்லைஐயரே.

    ----  செம்புதர  முடியுமே?

    ----  ஊகூம்,   இன்னம்   குறைவான  செலவாக   இருக்க  வேண்டும்.

    ---- பெரிய   பாவத்துக்கு  உரிய  பரிகாரம்  தேவை;    நீ  என்ன  இப்படிப்  பேரம்  பேசுகிறாய்போனால்  போகிறது,    வெல்லத்தால்  கொடு.

    ----  அது  முடியும்.   அதைக்  கொடுத்தால்    பாவம்     போய்விடும்  என்பது  நிச்சயந்தானே?

     ----  அதிலென்ன  சந்தேகம்?   அந்தப்  பாவத்தை    நான்   ஏற்றுக்கொண்டுவிடுவேன்.   அதிலிருந்து  நான்   நீங்குவதற்கு   எங்கள்  மொழியில் மந்திரம்   உண்டு.

     ---   இதோ   தருகிறேன்.

   கருமி  ஒரு    கைப்பிடி  வெல்லத்தில்  பூனை   உருவாக்கிக்  கொடுத்தான் . கிடைத்தவரைக்கும்   லாபம்  என  மகிழ்ந்த   புரோகிதர்  அதைக்  கையில் வாங்கியதுதான்  தாமதம்,   கருமி   அதைத்   தட்டிப்   பறித்துக்   கொண்டான்.
  
    கைக்கு  எட்டியது   வாய்க்கு  எட்டவில்லையே    என்ற  சோகத்துடன்  புரோகிதர்,  "அடப்   பாவி!   தானத்தைப்  பிடுங்கிக்கொண்டாயே!   யாராவது   இப்படிச்  செய்வார்களா?"      எனக்   கேட்டதற்கு,   அவன்,   "பூனையைக்  கொன்ற பாவம்  உங்களுக்குவெல்லம்  பிடுங்கிய  பாவம்   எனக்கு;   போய்  வாருங்கள்என்று  விடை   தந்தான்.

                                                 +++++++++++++++++++++++++

Wednesday, 22 October 2014

பிழையும் திருத்தமும் - 2

பிழையும் திருத்தமும் - 2

இது வேறு பட்டியல்


 பிழை 

திருத்தம் 
 1. அருகாமையில்

 அருகில்
 2. இளைய சகோதரன்
 தம்பி

 3. எட்டிப் போ
 எட்டப் போ  (எட்டும்எட்டாதுஎட்டாக்  கனி)
 4. ஏமாந்தார்
 ஏமாறினார்

 5. ஒருக்கால்
 ஒருகால்

 6. சிகப்பு
 சிவப்பு (செக்கச்  சிவந்த  கழுநீரும்  -  கலிங்கத்துப்  பரணி)
 7. சில்லரை                           
  சில்லறை

 8. சுடு தண்ணீர்                        
 வெந்நீர்

 9. செல்வந்தர்                          
  செல்வர்

 10. திகட்டுதல்                           
 தெவிட்டுதல்

 11. துடை ( உடலுறுப்பு )                 
தொடை 

 12. தொத்து  நோய்                      
 தொற்று  நோய்

 13. நீர்வீழ்ச்சி                           
அருவி

 14. பனிரெண்டு                          
 பன்னிரண்டு

 15. (பரிசை)  வெல்லுங்கள்             
 (பரிசைப்பெறுங்கள்

 16. மனசு , மனது                       
  மனம்  (மனமார,  மனத்தில்)

 17. மாற்றாந்தாய்                         
 மாற்றான்  தாய்

 18. முயற்சிப்போம்                       
முயல்வோம்

 19. மூத்த  சகோதரர்                     
 அண்ணன் ,  தமையனார்

 20. மென்மேலும்                         
 மேன்மேலும்


இரு  விதமாக  எழுதப்படுபவை:

            1. உலாவுதல்  
உலவுதல் 
                           2.  கருப்பு 
கறுப்பு
                           3. கூடு 
கூண்டு
                           4. சலங்கை 
சதங்கை
                           5. சறுக்கல்  
சருக்கல் 
                           6. துளை
தொளை
                           7. பொருத்தவரை 
பொறுத்தவரை
                           8. மங்களம் 
மங்கலம்
                           9. மெல்ல
மெள்ள
                         10. வேர்வை 
வியர்வை


Thursday, 2 October 2014

பிழையும் திருத்தமும்

             
       தமிழைப்   பிழைகளுடன்  எழுதுவோர்  பலப்பலர்;  மெத்தப்  படித்தோரும்  விலக்கல்ல.   தவறு  இல்லாமல் எழுத  விரும்புவார்  சிலராவது  இருக்கக்  கூடும். அவர்களுக்குப்  பயன்படும்  இச்  சிறு  பட்டியல்.



 பிழை 

 திருத்தம்
 1.  அடசல்  

அடைசல்  

(அடைந்து  கிடப்பது )

 2. அடுத்தப்  பக்கம்                              

அடுத்த பக்கம்
 3. அடையார்  (ஊர் )                            

அடையாறு
 4. அட்டைக்  கரி
அட்ட  கரி  

(அட்ட = சமைத்த;  அடுதல் = சமைத்தல் -----> அடுப்பு .
 (அதிகக்  கருப்பைக்  குறிப்பது) 
 சமையல்  பாத்திரத்தின்  அடியில்  பிடித்துள்ள  கரியே   அட்ட கரி.

 5. அரசுப் பணி
அரசு பணி
  
(அரசு பள்ளி,  அரசு  பேருந்து)

 6. ஆட்சேபணை 
ஆட்சேபனை  

(கற்பனை,  யோசனை,  ரசனை  போல )

 7. ஆளுனர்   
ஆளுநர்  ( இயக்குநர் ,   ஓட்டுநர் )

 8. இட ஒதூக்கீடூ
இட ஒதுக்கல்

 9. இணைய தளம்
இணையத் தளம்

 10. உயிர்க் கொல்லி
உயிர் கொல்லி

 11. உள்ளூர  
உள்ளுற

 12. எசகு  பிசகு 
இசகு  பிசகு

 13. கட்டு கடை 
கட்டுக்  கிடை  

(கட்டுக்கு + இடை )  துணிக்   கட்டுகளுக்கு  இடையில்  விற்காமல்  கிடப்பது

 14. கவிச்சி
கவிச்சு  =  மீன் நாற்றம்

 15. குத்துச் செடி
குற்றுச்  செடி 

(குற்றெழுத்து  போல -குறுமை = சிறுமை

 16. குளுமை
குளிர்மை

 17. கோரைப் பல்
கோரப் பல் 

(கோரம் = அசிங்கம்)

 18. சில காலம்
சிறிது காலம் 

(எண்ணக்கூடிய பொருள்களுடன்தான் சில அல்லது    பல வரலாம்: சில நாள், பல மாதம்).

 19. பயண சீட்டு
பயணச் சீட்டு

 20. பிசிர்
பிசிறு