Sunday, 20 December 2015

நூல்களிலிருந்து -- 1


நான்  வாசித்த  நூல்களின்  சில  பகுதிகள்  பலருக்கும்  பயன்படலாம்  எனக்  கருதுகிறேன்அவற்றை  அவ்வப்போது  பகிர்வேன்முதல்  நூல்அறிஞர்  எஸ். வையாபுரி இயற்றிய  "இலக்கியச்  சிந்தனைகள்"  (இரண்டாம்  பதிப்பு - 1956 . பக். 137.   21   கட்டுரைகளுள்தலைப்புதமிழும்  அகராதியும்)





     அகராதி  என்ற  பெயர்  முதன்முதலில் காணப்படுவது  1594 இல்  தோன்றிய 'அகராதி நிகண்டுஎன்ற  நூலின்  பெயரிலேதான்; இதன்  ஆசிரியர்  சிதம்பர  ரேவண சித்தர் என்னும்  வீரசைவப்  புலவர்இவர்  இட்ட  பெயரே  இப்போது  டிக்ஷனரி என்று  ஆங்கிலத்தில்  கூறும்  நூலுக்குரிய தமிழ்ப்  பெயராய்  அமைந்துவிட்டது.

     அரிச்சுவடியிலுள்ள  எழுத்து முறைப்படியே   சொற்களை  அமைப்பதுதான்   அகராதிமுறைஇது நமக்கு எளிதாகத் தோன்றுகிறது;  ஆனால் இரண்டாயிரம்  ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்து வந்திருக்கிற தமிழ்  இலக்கிய சரித்திரத்தில், இம்முறை16-ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் முதன்முதல் புலப்படுகிறதுஅப்பொழுதும் இது அரைகுறையாய்த்தான் கையாளப்பட்டது; சொல்லின் முதலெழுத்து முறையையே ஆசிரியர்கள்  நோக்கி  வந்தனர். உதாரணமாக அறிவன், அடியான், அருள், அவன், அஃது, அமர்  முதலிய  சொற்களை, முதலெழுத்தாகிய அகரம் ஒன்றையே கருதிஅவற்றை ஒரு முறையில்  நிறுத்தினர்;  இந்த  முறையை  அகராதி நிகண்டில்   காணலாம்.  இதனால்  அகரத்தில்  தொடங்கும் ஒரு  சொல்லை, குறித்த  ஓரிடத்தில் கண்டுபிடிப்பது எளிதாயில்லை. இரண்டாவது   எழுத்தையும் நோக்கி சொற்களை முறைப்படுத்திய  நூலொன்று   சுமார்  நூறு  ஆண்டுகளின்பின்  தோன்றியது;   இதன் பெயர்,  'அகராதி மோனைக் ககராதி எதுகை' என்பதாகும்; இம்முறையிலேயும் ஒரு  சொல்லைக் குறிப்பிட்ட இடத்தில் கண்டுபிடிப்பதற்கு வழி  இல்லாமலிருந்தது.

      முதன்முதலில்  சொற்களின்  எழுத்துகள்  அனைத்தையும் நோக்கி அகராதி  அமைத்தவர்கள் ஐரோப்பியப் பாதிரிகளே ஆவர்; 17 ஆம்  நூற்றாண்டு  பிற்பகுதியில்  ஐரோப்பியப் பாதிரியார்கள் தமிழ் நாட்டிற்கு வரத்  தொடங்கினர்தமிழ்  மக்களுக்குக்  கிறிஸ்தவ மத   உண்மைகளைத்  தமிழ்  மொழியிலே  போதிக்க  வேண்டுமென  இவர்கள் கருதினார்கள்ஆகவே  இவர்கள்  தாமும்  தமிழ்  கற்க  வேண்டுவது  மிக  அவசியமாய்  முடிந்தது;   கற்பதற்குக்  கருவி  நூலாக   அகராதி  ஒன்று   இயற்ற  வேண்டுவதும்   இன்றியமையாததாயிற்று;  எனவேதமிழில்   முதன்முதலில்  அகராதி  தோன்றுவதற்குக் காரணமாய்  இருந்தவர்கள்   இப்பாதிரிமார்களே  ஆவர்.

    அந்நிய  மொழிக்கு  உரியோராகிய  பாதிரிமார்கள் அகராதி  இயற்றப்  புகுந்தது ஒரு  நல்ல  அதிருஷ்டம்  என்றேதான்  கூறவேண்டும்;    ஏனெனில் சில  நன்மைகள்  இதனால்  விளைந்தனமுதலாவதுபிற  மொழிகளில்  அகராதிகள்   செப்பமாக  அமைந்துள்ள முறையைத்  தமிழ்  அகராதிகளிலும்    கையாள  முடிந்தது; இரண்டாவதுபாதிரிகளுக்குத்  தமிழ்   புதிய  மொழி  ஆகையினாலே இவர்கள் தமிழிலுள்ள எல்லாச் சொற்களுக்கும்  பொருளுணர  வேண்டியவர்களாயிருந்தனர். ஆகவே கடின பதம் எளிய பதம் என்ற வேற்றுமையின்றி எளிய பதங்களுக்கும்கூடப் பொருள் விளங்க வேண்டுவது  அவசிமாயிற்றுஉதாரணமாகநான்அது, வீடு முதலிய சொற்களையும்  அகராதியில் விளக்கவேண்டியதாயிற்று;  மூன்றாவதுநூல் வழக்கிலன்றிசாதாரண மக்கள் பல பிராந்தியங்களிலும் வழங்கி வந்த சொற்களும்  அகராதியில் இடம் பெற்றன. தமிழ் கற்ற பண்டிதர்கள் இவ்வழக்குச்   சொற்களிற் பலவற்றை, இழிசனவழக்கு என்றேனும்வழுச்சொல் என்றேனும் ஒதுக்கி விடுவார்கள்ஆனால் அந்நிய நாட்டுப் பாதிரியார்கள்  இவ்வாறு  ஒதுக்க  முடியாதுஅவர்கள் சாதாரண மக்களோடுஅதுவும்  கல்வி  பெறாத கீழ்த்தட்டு மக்களோடுபழகி வந்தார்கள்அம்மக்கள் பேசுவதை உணர்வதும் அவர்கள் வழங்கும் சொற்களை உணர்வதும் அவசியம். எனவே  அவ்வழக்குச்  சொற்களும் அகராதியில்  இடம்  பெற்றனஇவ்வாறாக, தமிழ் மக்களுள்  பல   இனத்தாரும் வழங்கும் சொற்கள் எல்லாம் அகராதிகளில் அமைவதற்கு இப்பாதிரிகளே  வழிகாட்டியாய்  இருந்தார்கள்.

     1679 இல்  தமிழ்ப்  போர்த்துகீசிய அகராதி  ஒன்று  ப்ரொ  இன்ஸா என்ற  பாதிரியாரால்  இயற்றப்பட்டதுஆனால் இப்போது  இது  மறைந்துவிட்டதுஇதனையடுத்துத்  தோன்றியது  பிரசித்தி  பெற்ற  சதுரகராதியாகும்இதுவே  தமிழில்  முதன்முதலில்  பிறந்த   அகராதி  என்று  சொல்லலாம்இதனை  இயற்றியவர்  தைரியநாதஸ்வாமி என்றும்  வீரமாமுனிவர்  என்றும் பெயர்  வழங்கிய பெஸ்கி  (Father Beschi) யாவர்.

 ----------------------------------------------
(படம் உதவி: இணையம்)

Saturday, 12 December 2015

பலசரக்கு


1 ---  அனுபவம்பட்டறிவு

    சமற்கிருதச் சொல் அனுபவம்;  அதைப்  பட்டறிவு  எனப்  பெயர்த்துள்ளோம்ஆனால்  இரண்டும்  வெவ்வேறு.

     முதன்முதலாகத்  தீயைத்  தொடுகிற குழந்தை  உடனடியாகக்  கையை  இழுத்துக்கொள்கிறதுசுரீர்  என்ற  சூடும்   வலியும்   வேதனையும்   அனுபவம்; இனி  நெருப்பைத்  தொடக்கூடாது   என்ற  முடிவு,  பட்டறிவு: பட்டதனால்  பெற்ற  அறிவு.

அனுபவம்,   உணர்ச்சி;  பட்டறிவு,   சிந்தனை.

 எனவே,  அனுபவத்தைப்  பட்டறிவு  என்பது  தவறு.

2 --- விளையாட்டு  வீரர் , வீராங்கனை    

 ஸ்போர்ட்சை விளையாட்டு என்கிறோம். விளையாட்டில் முன்னேறுவதற்குத் தேவைப்படும் பண்புகள்  உடல்வலிமை, பயிற்சி, தாக்குப்  பிடிக்கும்  திறன், விடாமுயற்சி, தன்னம்பிக்கைஅனுபவம் அல்லவோ?  வீரத்துக்கு ஏது  இடம்அது  என்ன  போரா?

  ஆகவே விளையாட்டு வீரர்வீராங்கனை இரண்டும் தவறான  சொற்றொடர்கள்; இருப்பினும் வழக்கத்துக்கு வந்துவிட்டனவைத்துக்கொள்வோம்.

 3 ---  இரட்டைக்  கிளவி

   'கண்ணோடு   காண்பதெல்லாம்  தலைவா'   எனத்  தொடங்கும்,   நித்யஶ்ரீ  மகாதேவன்  பாடிய  திரைப்  பாடலில்,  'இரட்டைக்   கிளவி  உண்டல்லோ?' என்னும்  வினா  இடம் பெற்றுள்ளது; அது  சிலர்க்குப்  புரியாமல்  இருக்கலாம்அவர்களுக்காகக்  கீழ்வரும்  விளக்கம்:

      கலகல  என்று  நகைத்தாள்.
      தொணதொண  எனப்  பேசுகிறார்.

   மேற்காட்டுகளில்  ஒரு சொல் சேர்ந்து  இரண்டு  தடவை  வருகிறதுஅப்படிப்பட்ட  சொல்  இரட்டைக் கிளவி.

   இதற்கு  இலக்கணம்  நன்னூல்  396- இல்  உண்டு:

          "இரட்டைக்  கிளவி  இரட்டிற்பிரிந்து  இசையா"

பொருள் -- இரட்டையாக  வரும்  சொற்கள்  தனித்தனியே பிரியா. அதாவது , கல   என்றோ   தொண  என்றோ  தனியாக   வந்தால்  அர்த்தம்   இல்லை.

    மேலும்  காட்டுகள்:

   வெதவெதகடகடசிடுசிடுத்தான்பளபளக்கும்வழவழப்பான, சுறுசுறுப்பு, அருவருப்பு.

     பழமொழி:   பனங் காட்டு  நரி  சலசலப்புக்கு  அஞ்சாது.

      ஓடு ஓடுஅதுதான்  அதுதான்இவை  இரட்டைக்  கிளவியல்லஏனென்றால்  தனியாகப்  பிரித்தால்  பொருள் தரும்அடுக்குத் தொடர்  என  இவற்றுக்குப்  பெயர். மூன்று  முறை  நான்கு  முறைகூட  அடுக்கி வரலாம்:

        சிறு சிறு பிழைகள்.
       "ஒளிபடைத்த  கண்ணினாய் வா வா வா" (பாரதியார்)


   4 -- குத்தியும்  கொத்தியும்

         


குத்துதல் =   கூரிய கருவியை  ஒன்றனூடே  செலுத்தல்:  

முள்  குத்தும் , ஊசி குத்துகிறாள்கத்தியால்  குத்தினான்.

    நீல  வண்ணத்தோர்  எழில்  பறவை, நீர்நிலைக்கு  மேலே, இறகடித்தபடி  நின்று  திடீரென  நீர்க்குள்  மூழ்கி   ஒரு  மீனைக்   குத்தி  எடுக்கும்: அது    மீன்குத்தி.   இதன்   சங்க  காலப் பெயர்சிரல்.
                          
குறள்:    

கொக்குஒக்க  கூம்பும்  பருவத்து  மற்றதன்
குத்துஒக்க  சீர்த்த  இடத்து.

ஐந்திணை   ஐம்பது; பா 24:

 கோலச்  சிறுகுருகின்  குத்து

         -- கொத்துதல்தோண்டுதல்.

      வேறொரு  பறவை   மரத்தண்டில்  அமர்ந்து  டொக் டொக்  என்று அலகால்  கொத்திப்   பட்டையைப்  பெயர்த்து  உள்ளிருக்கும்  புழு பூச்சியைத்  தின்னும்அது  மரங்கொத்தி.
 
5 ---  ஒப்பித்தலும்  ஒப்புவித்தலும்

ஒப்பித்தல் = மனப்பாடம்   பண்ணியதைப்  புத்தகம்  பாராமல்  சொல்லுதல்:

             ஆசிரியரிடம்   மாணவர்கள்  பாடத்தை  ஒப்பித்தார்கள்.

ஒப்புவித்தல் = உரியவரிடம்  சேர்த்தல், ஒப்படைத்தல்:

           பெட்டியை  அவரிடம்  ஒப்புவி.


 6 --  பல்லக்கு



     பரியங்க்கா  என்ற   வடசொல்   போர்த்துக்கீசிய   மொழியில்   பலான்க்கீம்  என  மாறி  ஆங்கிலத்துள்   நுழைந்து   பலென்க்கீன்  (palanquin)  ஆனதுஅதை  நாம்  பல்லக்கு  என்கிறோம்.

    முந்தைய  தமிழ்ச்சொல்  சிவிகை   ஓய்வு பெற்றது:

   குறள்  --      அறத்தாறு   இதுவென  வேண்டா   சிவிகை
                         பொறுத்தானோடு  ஊர்ந்தான்  இடை.


7 --  எட்டேகால்  லட்சணம்

இந்தச்  சொற்றொடரைக்  கேள்விப்பட்டிருப்பீர்கள்;

     எட்டேகால்  லட்சணமே   எமனேறும்  பரியே

     எனத்  தொடங்கும்  தனிப்  பாடல்   ஒன்றுண்டு.

 எண்களைக்  குறிக்கப்   பழந்தமிழர்  எழுத்துகளைப்  பயன்படுத்தினர்:

      1  -  ;   2 --    ;   7 -- ;   8 -- ;   1/4 -   

      அதன்படி

       எட்டேகால்:   அவ
      எட்டேகால்  லட்சணம்   = அவ லட்சணம்.   (அழகற்றது,  அசிங்கம்).

&&&&&&&&&&&&&&
(படங்கள் உதவி இணையம்)


Thursday, 3 December 2015

கண்ணதாசன்


    



  இவரது இயற்பெயர் முத்துதத்துப் போன இடத்தில் வைத்த  பெயர்  நாராயணன்எப்படிக் கண்ணதாசன்  ஆனார்? விவரித்திருக்கிறார்தம் சுயசரிதை, 'வனவாசம்', என்னும் நூலில்; அதில் அவர், 'அவன்'  எனத் தம்மைப்  படர்க்கையில்  குறிப்பிடுகிறார்.

    வேலை தேடி ஒரு  பத்திரிகை அதிபரைப் போய்ப் பார்த்தபோது  நடந்த  நிகழ்ச்சி,  பக்கம்  57, 58 இல், இடம்  பெற்றிருக்கிறது:

    "என்ன  பெயரில்  இதுவரை  தை  கட்டுரைகள்  எழுதியிருக்கிறீர்கள்?   என்று அவர்  கேட்டார்.

     சொந்தப்  பெயரைச்  சொல்ல  வந்த  அவன்   கொஞ்சம்  தயங்கினான்புனைபெயருக்குச்  செல்வாக்கு  இருந்த  காலம்  அதுஅதிலும்  தாசன்  என்று  வரும்  புனைபெயருக்கு   மரியாதையே  தனிபாரதிதாசன்கம்பதாசன்சக்திதாசன்காளிதாசன்  என்ற  பெயர்கள்  நாலு  பேருக்குத்  தெரிந்த  பெயர்களாக  விளங்கினஅவன்,  'என்ன  தாசன்என்று  சொல்லலாம்  என்று  யோசித்தான்சில விநாடி யோசனைக்குப்  பின்,  தான்  யோசித்துச்  சொல்வதை   அவர்  அறியாமல்  மறைக்க,  எங்கேயோ  நினைவில்  இருந்தவன்போல,  'என்ன  கேட்கிறீர்கள்?'  என்று  கேட்டான்.

        மீண்டும்  அவர்  பழைய  கேள்வியையே  திருப்பினார்அப்போதே  அவன்  முடிவு  கட்டியபடி, பளிச்சென்று, 'கண்ணதாசன் என்பது  என்  புனைபெயர்' என்றான்; அவரும் அது ஏதோ அறிமுகமான பெயர்போல் 'பார்த்திருக்கிறேன்   பத்திரிகைகளில்என்றார்.

      இதற்குப்  பெயர்தான்   சந்தர்ப்பம்  என்பது!   உண்மையில்  அவர்  அந்தப்  பெயரை  எந்தப் பத்திரிகையிலும்  பார்த்திருக்க  முடியாதுஅந்தப்  பெயரே  இரண்டு  நிமிடங்களுக்கு முன்னால்தான்  பிறந்தது!

 தெரியாததுபோல் காட்டிக்கொள்வது பெரிய மனிதர்களுக்கு   அழகில்லையல்லவாஅவர்  தெரிந்ததுபோல் காட்டிக்கொண்டார்அவனும்  சளைத்தானா?  "நீங்கள்  பார்த்திருக்கக்  கூடும்"  என்று   மட்டும்  கூறினான்.

                         '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''       
                      (படம் உதவி: இணையம்)