சில உடன்படிக்கைகளில் ஒரு மாத
முன்னறிவிப்பு தரவேண்டும் என்னும் நிபந்தனை இடம் பெறுகிறது.
இது ஆங்கில ஆட்சியால் தான்
புகுத்தப்பட்டிருக்கும்; ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஒரு
தமிழ் இலக்கியத்தில் காணப்படுவது வியப்பு தருகிறது.
அசோக வனத்தில் சீதை தன்னிடம் விடை
பெற்ற அனுமனிடம் கெடு விதித்தாள்:
இன்னும் ஒரு மாதம் காத்திருப்பேன்;
அதற்குள் இராமன் வந்து என்னை மீட்காவிடில்
உயிர் துறப்பேன் என அவனிடம் கூறு என்பது அவள் கட்டளை.
" இன்னம் ஈண்டுஒரு திங்கள் இருப்பல்யான்
பின்னை ஆவி பிடிக்கின்றிலேன்
......."
( இன்னம் இங்கு ஒரு மாதம் இருப்பேன் நான். பின்பு உயிர் தரிக்கமாட்டேன்)
கம்பர் - யுத்த காண்டம் - சூடாமணிப்
படலம்.
நிபந்தனை பற்றி நூற்றாண்டுகள் முன்பே இலக்கியம் காட்டுவது மிகவும் வியப்புக்குரியதுதான். பகிர்வுக்கு மிகவும் நன்றி.
ReplyDelete