காட்சி - 6
இடம் -- தெரு.
பாத்திரங்கள் -- பாத்லேன், திபோ.
பாத்லேன்-- என்ன, இளைஞனே, காரியத்தை
நன்றாய் முடித்தேனா?
திபோ -- பே!
பாத்லேன் -- வழக்கு முடிந்துவிட்டது; இனிமேல், பே
வேண்டியதில்லை. உனக்கு
நல்ல யோசனை சொன்னேன், அல்லவா?
திபோ -- பே!
பாத்லேன் --- பயப்படாதே; இனி யாரும் உன்னை
ஒன்றுஞ் செய்ய முடியாது.
நன்றாய்ப் பேசலாம். என் கட்டணத்தைக் கொடு.
திபோ -- பே!
பாத்லேன் -- உன் பே தேவையில்லை; பணந்தான் தேவை.
திபோ -- பே!
பாத்லேன் -- என்ன, கிண்டலா? தண்டனை கிடைக்காமல் காப்பாற்றினதற்குத்
தொகை கொடு, சீக்கிரம்.
திபோ -- பே!
பாத்லேன் -- பேசினபடி பணந் தரப் போகிறாயா, இல்லையா?
திபோ -- பே!
(போகிறான்)
பாத்லேன் -- எவரையும் ஏமாற்ற என்னால் முடியும்
என்று நினைத்திருந்தேன்;
என்னைவிடப் பெரிய ஆளாய் இருக்கிறான், ஆடு மேய்க்கிறவன்.
(முடிவு)
குறிப்பு: இந்த நாடகத்திலிருந்து பிறந்ததே, 'உனக்கும் பேபே, உங்கப்பனுக்கும்
பேபே' என்ற பழமொழி; பிரஞ்சிந்தியாவில் உருவானது அது.
[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[
//குறிப்பு: இந்த நாடகத்திலிருந்து பிறந்ததே, 'உனக்கும் பேபே, உங்கப்பனுக்கும் பேபே' என்ற பழமொழி; பிரஞ்சிந்தியாவில் உருவானது அது.//
ReplyDeleteஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !
இந்தப் பழமொழியை நான் சென்ற பகுதியிலேயே என் பின்னூட்டத்தில் சொல்லியிருந்தேன்.
நல்லதொரு முடிவு. நாடகம் அருமை. பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.
ஆமாம் , சொல்லியிருந்தீர்கள் , உங்கள் பாராட்டுக்கு மிகுந்த நன்றி .
Deleteபே....
ReplyDeleteநல்லாயிருந்தது ஐயா...
தொடர்ந்து வாசித்துப்பாராட்டிப் பின்னூட்டம் எழுதியமைக்கு மிகுந்த நன்றி .
Deleteபள்ளியில் நாடகமாக நடித்த நினைவுகள் மீண்டும்
ReplyDeleteபின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி . உங்களின் மலரும் நினைவுகளுக்கு நான் பயன்பட்டதில் மகிழ்கிறேன் .
Deleteஉனக்கும் பே பே உங்கப்பனுக்கும் பே பே கதையின் மூலம் அறிந்தேன். நல்ல நகைச்சுவை. பகிர்வுக்கு மிகவும் நன்றி!
ReplyDeleteபாராட்டுக்கு மிக்க நன்றி .
Delete