Saturday, 7 January 2017

வல்லவனுக்கு வல்லவன் - 2


காட்சி - 3   --   இடம்: வழக்குரைஞர் இல்லம்.

                வியாபாரி, கீய்மேத், பாத்லேன்.

   (கடைக்காரரை ஏமாற்றுவதற்குக் கணவரும் மனைவியும் தயார்)





வியாபாரி -- ஐயாவழக்குரைஞர் ஐயா!

கீய்மேத் -- எது சொல்வதாக இருந்தாலும்மெதுவாகப் பேசுங்கள்.

வியாபாரி -- கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.

கீய்மேத் -- இன்னம் மெல்ல.

வியாபாரி -- எங்கே அவர்?

கீய்மேத் -- அந்தோபடுக்கையில் கிடக்கிறார், பாவம், பதினொரு வாரமாய்.

வியாபாரி --- யார்?

கீய்மேத் -- மன்னியுங்கள்நான் உரத்துப் பேசத் துணியவில்லைஅவர் பலவீனமாக இருக்கிறார்.

வியாபாரி -- யாரைப் பற்றி சொல்கிறீர்கள்?

கீய்மேத் -- பிஏர்.

வியாபாரி -- என்னது? செத்தமுன்னே வந்து துணி வாங்கவில்லையா?

கீய்மேத் -- யார்,   இவரா?

வியாபாரி --  ஒரு மணிகூட ஆகியிருக்காதுகாக்க வைக்காமல் பணத்தைக் கொடுங்கள்.

கீய்மேத் -- என்னகதையா விடுகிறீர்கள்?

வியாபாரி -- உங்களுக்கென்ன கிறுக்காஒன்பது பிரான்,  என் பணம். அவரை வரச்சொல்லுங்கள்.   

கீய்மேத் -- அவரால் முடியாதே!

வியாபாரி -- வழக்குரைஞர் பிஏர் பாத்லேன் வீடுதானே இது?

கீய்மேத் -- ஆமாம், மெல்லப் பேசுங்கள். அவர் தூங்கட்டும்.

வியாபாரி -- மெல்ல என்றால், கிணற்றுக்குள்ளிருந்து பேசுவது போலவா
அவர் ஆறு ஓன் கம்பளித் துணி இன்று வாங்கினார்.

கீய்மேத் -- இன்றைக்காபதினொரு வாரமாய்ப் படுத்துக் கிடக்கிறார்.

வியாபாரி -- இதோ பாருங்கள்ஆறு ஓன் துணிக்குப் பணங்கொடுங்கள்.

கீய்மேத் --- யாரிடங் கொடுத்தீர்கள்?

வியாபாரி -- இவரிடந்தான்.

கீய்மேத் --- இவருக்கு எதற்குக் கம்பளி?   இவர் வெள்ளை மட்டுமே உடுத்துவார்.

வியாபாரி -- நான் அவரிடம் பேச வேண்டும்.

பாத்லேன் -- கீய்மேத், கொஞ்சம் வொய்ன் கொடு, என்னைத் தூக்கி விடு.

வியாபாரி -- அவர் குரல் கேட்கிறது.

கீய்மேத் -- ஆமாம்.

பாத்லேன் -- இங்கே வாஎதற்காக சன்னல்களைத் திறந்தாய்? போர்த்துவிடு.  இந்தக் கருப்பு மனிதர்களைப் போகச் சொல். தடதடாமொற மொற.   அவர்களை என்னிடம் அழைத்து வாஅழைத்து வா.

கீய்மேத் -- என்ன இதுஏன் இப்படி அசைகிறீர்கள்?

பாத்லேன் -- உனக்குப்  புரியாதுஅதோ ஓரு கருப்புப் பாதிரியார் பறக்கிறார். அவருக்கு ஒரு அங்கி கொடு. பூனை, பூனை! எவ்வளவு வேகமாக ஏறுகிறது!

கீய்மேத் --- என்னென்னவோ உளறுகிறீர்கள்.

பாத்லேன் -- இந்த மருத்துவர் என்னைக் கொல்லுகிறார்கஷாயத்தைக் குடிக்கச் செய்து.

கீய்மேத்  - ஐயா,   வந்து பாருங்கள்எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்று.

வியாபாரி - உண்மையாகவே நோயாளியா? இப்போதுதானே 
கடைத்தெருவிலிருந்து வந்தார்!

கீய்மேத் --- கடைத்தெருவிலிருந்தா?

வியாபாரி -- பின்னேஐயா, பிஏர்,   என் துணிக்குப் பணங் கொடுங்கள்.

பாத்லேன் -- வாருங்கள். இரண்டு மாத்திரைகல்லைவிடக் கெட்டி. தின்றேன்மீண்டும் எனீமா எடுக்க வேண்டுமா?

வியாபாரி --- எனக்கென்ன தெரியும்? என் பிரச்சினையா அது? எனக்கு வேண்டியது ஒன்பது பிரான் அல்லது மூன்று வெள்ளி.

பாத்லேன் -- மூன்று கருப்பு உருண்டைகளையும் மாத்திரை என்றா சொல்கிறீர்கள்? பல்லையே ஆட்டங்காணச் செய்துவிட்டன. கர்த்தரே! இனிமேல் அதைத் தராதீர்கள். என்ன குமட்டல்! அதைவிடக் கசப்பு வேறில்லை.

வியாபாரி -- என்னுடைய ஒன்பது பிரான் கொடுக்கவில்லை.

பாத்லேன் --- எவ்வளவு கஷ்டம் கொடுக்கிறார்! தூக்கில் போட வேண்டும்!

வியாபாரி --- பணம் அல்லது துணி.

பாத்லேன் --- சிறுநீரைப் பாருங்கள்அது சொல்லவில்லையாநான் செத்துக்கொண்டு இருக்கிறேன் என்று?

கீய்மேத் --- போங்கள் ஐயா! அவரைச் சங்கடப்படுத்தாதீர்கள்.

வியாபாரி --- ஆறு ஓன்! அதை நான் இழப்பதாசொல்லுங்கள்,   மனசாட்சிப்படி.

கீய்மேத் --- ஐயோ! இவ்வளவு தொல்லைப்படுத்துவதாஇந்த அளவு கல்மனமா? நீங்கள் டாக்டர் என்று அவர் நினைத்துக்கொண்டிருப்பதைத் தெளிவாகப் பார்க்கிறீர்கள். பதினொரு வாரம்தொடர்ச்சியாய், படுக்கையில்!

வியாபாரி -- தெய்வமே! எப்படி இந்த நோய் வந்தது என்பது புரியவில்லை. இன்றைக்கு வந்து துணி வாங்கினாரே!

கீய்மேத் --- ஐயோமாதாவேஉங்களுக்கு ஞாபகம் சரியில்லை. என்னைக்  கேட்டால் நீங்கள் போய் ஓய்வெடுங்கள் என்பேன். உங்களை இங்கே பார்த்து நிறைய பேர் வதந்தி பரப்பக்கூடும். தயவு செய்து வெளியே போங்கள். மருத்துவர் வருகிற நேரம்.

வியாபாரி --- யார் எதைப் பரப்பினாலும் எனக்குக் கவலையில்லை
ஏனென்றால் என் மனம் தூய்மையானது. சரி, வாத்துக்கறி அடுப்பில் இருக்கிறதா?

கீய்மேத் -- ஆகா! என்ன அருமையான கேள்வி! நோயாளி உணவா அதுவீட்டுக்குப் போய்த் தின்னுங்கள்வாத்து!

(கடைக்காரர் போகிறார். அவருக்கு ஒரே குழப்பம்: துணி வாங்கியவர் இவர்தானா அல்லது வேறு ஆளா?)

                                      \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
(படம் உதவி - இணையம்)




Thursday, 29 December 2016

வல்லவனுக்கு வல்லவன் - 1



(மஞ்சரி 2016 ஜூன் இதழில் வெளிவந்தது)

15-ஆம் நூற்றாண்டில், ஒரு பிரஞ்சு நகைச்சுவைக் குறு நாடகம் பதினொரு காட்சிகள் உடையதாய், செய்யுளில் இயற்றப்பட்டது; ஆசிரியரின் பெயர் உறுதியாய்த் தெரியவில்லை. அதன் முக்கிய காட்சிகளை உரைநடையில், நீக்குப்போக்குடன், மொழிபெயர்த்துத் தருகிறேன்.

மூலத்தின் தலைப்பு: வழக்குரைஞர் பாத்லேன்


(படம் - நன்றி இணையம்)

  
காட்சி --- 1                                             
இடம் -- வீடு.
பாத்திரங்கள் --- வழக்குரைஞர் பிஏர் பாத்லேன், மனைவி கீய்மேத்.


பாத்லேன் -- கீய்மேத், பணஞ்சம்பாதிக்க நான் எவ்வளவோ முயன்றாலும், முடியவில்லை. புனித மேரியே, பேர் வாங்காமற்போனாலும், நான் கொஞ்ச காலம் தொழில் செய்தேனே!

கீய்மேத் -- மாதாவே, நானும் அதைத்தான் நினைத்தேன். வழக்கில் வெற்றி பெற, முன்பு கொஞ்சம் பேர் உங்களைத் தேடி வந்தார்கள். இப்போது, எல்லாரும் 'வெட்டி வழக்குரைஞர்' என்கிறார்கள்.

பாத்லேன் -- என்றாலும், இந்தப் பிரதேசத்தில், மேயரை விட்டால், அதிகப் புத்திசாலி என்னைக் காட்டிலும் வேறு யாருமில்லை; இதைத் தற்புகழ்ச்சிக்காகச் சொல்லவில்லை. எந்த வழக்கிலாவது அக்கு வேறு ஆணி வேறாக நான் பிரிக்காமல் இருந்தேனா?

கீய்மேத் -- என்ன பயன்? வறுமையால் சாகிறோம். என்னுடைய உடைகள் கிழிந்துவிட்டன; வேறு உடை எப்படி வாங்குவது எனத் தெரியவில்லை. உங்கள் திறமை எதற்கு  உதவுகிறது?

பாத்லேன் -- உடைதானே? எனக்குத் தெரியும் எப்படிப் பெறுவதென்று.

                                                                      ------------------

காட்சி 2.
இடம் : துணிக் கடை.
பாத்திரங்கள் --  பாத்லேன், வியாபாரி ழெரோம்.

(பாத்லேன் துணிக்கடைக்குப் போய்க் கடைக்காரரைப் பலவாறு புகழ்ந்து, உச்சி குளிரச் செய்த பின்பு)

பாத்லேன் -- இது கம்பளி நூலால் ஆனதா?

வியாபாரி -- அசல் ரூஆன் நகரத்து அருமையான கம்பளித் துணி. நல்ல நெசவு என உத்தரவாதம் தருகிறேன்.

பாத்லேன் -- நான் துணி வாங்குகிற எண்ணத்தில் வரவில்லை. இந்தத் துணியும் நிறமும் பிடித்திருக்கின்றன. வீட்டில் எண்பது வெள்ளிக் காசு இருக்கிறது.

வியாபாரி -- வெள்ளிக் காசா? ஏ யப்பா!

பாத்லேன் -- எனக்குக் கோட்டும் மனைவிக்குக் கவுனும் தேவைதான்.

வியாபாரி -- கம்பளிதான் வேண்டுமென்றால் வாங்கிக்கொள்ளுங்கள்.

பாத்லேன் -- ஒரு ஓன் என்ன விலை?

வியாபாரி -- இருபத்து நான்கு காசு.

பாத்லேன் -- வேண்டாம், வேண்டாம்; இருபத்து நான்கு காசு! மாதாவே!

வியாபாரி -- போன குளிர்காலத்திலே நிறைய ஆடு செத்துப்போனதால் கம்பளி இப்போது கிராக்கி.

பாத்லேன் -- சரி, என்ன செய்வது? ஆறு ஓன் அளங்கள். எவ்வளவு ஆயிற்று?

வியாபாரி -- ஒன்பது பிரான்.

பாத்லேன் -- மூன்று வெள்ளி ஆகிறது; வீட்டுக்கு வந்து வாங்கிக்கொள்ளுங்கள்.

வியாபாரி -- சரி, வருகிறேன்.

பாத்லேன் -- என் வீட்டில் சாராயம் குடிப்பதற்கு வேறு வாய்ப்பு கிடைக்காது.

வியாபாரி -- குடிப்பதைக் காட்டிலும் இன்பம் வேறென்ன? வருகிறேன்.

பாத்லேன் -- அப்படியே, என் மனைவி ரோஸ்ட் பண்ணுகிற வாத்துக்கறியும் சாப்பிடலாம்.

வியாபாரி -- ரொம்ப மகிழ்ச்சி; போங்கள்; நான் துணியை எடுத்துக்கொண்டு அப்புறம் வருகிறேன்.

பாத்லேன் -- இது ஒரு கனமா? நானே கக்கத்தில் இடுக்கிக்கொண்டு போய்விடுவேன்.

வியாபாரி -- அப்படியானால் சரி; தாமதம் செய்யாமல் பணம் கொடுத்துவிட வேண்டும்.

பாத்லேன் -- நிச்சயம். (போகிறார்)

வியாபாரி - இருபது காசு பெறாததை இருபத்து நான்குக்கு வாங்கியிருக்கிறார்.

    (ஒரு ஓன் : 1.2 மீட்டர்)

                                            +++++++++++++++++++++++++++++





Wednesday, 14 December 2016

புதுப் பிரதேசங்களைத் தேடி






கடலில் நெடுந்தொலைப் பயணித்துப் புதியநிலப் பகுதிகளைக் கண்டறிய வேண்டும் என்ற ஆர்வத்தையும் அதற்கான வசதி வாய்ப்பையும் சில  நாட்டினரே பெற்றிருந்தனர்.

  பொ.யு.மு.வுக்கு முன்பே யவனர் இந்தியாவரை கலஞ்செலுத்திவந்து, தமிழகம் இலங்கை பற்றி அறிந்து  ஆவணப்படுத்தியுள்ளனர். கிரேக்க மொழியில் இயற்றப்பட்ட Periplus என்னும் நூல் (பொ.யு.மு. 1 ஆம் நூ.) ரோமிலிருந்து கேரளம் வரைக்குஞ் செல்வதற்கான கடற்பாதையையும்  கடல் வாணிகத்துக்கான வாய்ப்புகளையும் தெரிவிக்கிறது;  Ptolemy என்பவரின் Geographia  (பொ.யு. 2-ஆம் நூ.) என்ற புத்தகம் ஐரோப்பாவுக்கும்  சீனாவுக்கும் இடையில் உள்ள நாடுகளைக் காட்டும் படங்களோடு (maps) ஏராள விவரங்களையும் கொண்டுள்ளது.

     ஆனால் பெருமளவு கண்டுபிடிப்புகள் பிற்காலத்தில்தான் நிகழ்ந்தன.
  13-ஆம் நூற்றாண்டின் இறுதியில் வெனீசு நகரத்து Marco Polo   தூரக் கிழக்கு நாடுகளுக்குப் பயணித்து எழுதிய விவரமான நூல் Book  of the Marvels of the World அங்கெல்லாம் போக வேண்டும் என்ற பேராவலை மாலுமிகளிடம்  தூண்டியிருந்தது. திசைகாட்டி, சுக்கான் முதலிய நவீன கருவிகளின் புனைவும் கப்பல் கட்டும் தொழில் நுட்ப முன்னேற்றமும் 15-ஆம் நூற்றாண்டில் பற்பல கடலோடிகளுக்குத் துணிச்சலூட்டியது.

  போர்த்துகீசியர் முந்திக்கொண்டனர். மன்னர் முதலாம் ஜானும் அவரது மகன் ஹென்றியும் வினைமாண் நன்கலன்களைக் கட்டிபயிற்சியும் திறமையும் ஒருங்கே பெற்ற வலவர்களையும் ஊழியர்களையும் உருவாக்கிமெல்லமெல்ல ஆனால் துல்லியமாய், பயணத்துக்கான முன்னேற்பாடுகளைச் செய்துமுடித்தனர். அவர்களின் கப்பல்கள் ஆப்பிரிக்காவின் மேலைக் கரையையொட்டித் தெற்கு நோக்கி வந்தன.  சொல்லொணாத் தடைகளை எதிர்கொள்ள நேர்ந்தது: பலத்த காற்று  பாய்களைக் கிழித்துத் தொங்க விட்டமையால் ஊர்திகள் ஸ்தம்பித்தன; உணவும் குடிநீரும் குறையத் தொடங்கின; ஆயினும் மாலுமிகள் மனந்தளராமல் முயன்று முன்னேறி 1471-இல் நிலநடுக் கோட்டைக்  கடந்து, கண்டத்தின் தென் முனையை 1487-இல் எட்டினர். அவர்களின் தலைவர் Bartholomeu Diaz ,  'புயல்முனைஎன அதற்குப் பெயரிட்டார்பின்னாளில் அது ' நன்னம்பிக்கை முனை' ஆயிற்று.

  இத்தாலியர் Christhopher Columbus,  ஸ்பெயின் அரசர் Ferdinand   உதவியால்,   மூன்று கப்பல்களில் 90 ஆட்களோடுமேற்குப் பக்கமாய்ப் போய் இந்தியாவை அடைய வேண்டும் எனற குறிக்கோளுடன், 1492-இல் புறப்பட்டு அமெரிக்காவைக் கண்டுபிடித்தமை உலகறிந்த செய்தி. நான்கு பயணங்கள் செய்த அவர் ஒரு புதுக் கண்டத்தை அறிந்ததாய் நினைக்கவில்லை; இந்தியாவில் இருப்பதாய்த்தான் நம்பினார். அவருக்குப் பின், இத்தாலியர் Amerigo Vespucci அமெரிக்கா நோக்கிப் பல தடவை சென்று அக்கண்டத்தின் வெவ்வேறு பகுதிகளைக் கண்டறிந்தார்.

  போர்த்துகீசியர் Vasco de Gama  தம் நான்கு கலன்களோடு பயணித்துநன்னம்பிக்கை முனையைத் தாண்டி,   இந்தியப் பெருங்கடலில் நுழைந்தார்;     பருவக் காற்று ஒத்துழைத்தமையால் கள்ளிக்கோட்டைக்கு நல்லபடி வந்து  சேர்ந்தார்கள். அதே நாட்டினராகிய Magellan பசிபிக் பெருங்கடலைக் கடந்து, பிலிப்பைன்ஸ் தீவுகளை அடைந்தார்; ( பசிபிக் என்று பெயர் சூட்டியவர் அவர்தான். அமைதியானது என்று  பொருள்). அவ்விட மக்களால் அவர் கொல்லப்பட்டார்ஆயினும் அவரது உதவியாளர் Sebastian del Cano பயணத்தைத் தொடர்ந்துஇந்தியப் பெருங்கடல் வழியாய் நன்னம்பிக்கை முனையைச் சுற்றிக்கொண்டுபுறப்பட்ட இடத்துக்கே (ஸ்பெயின்) வந்தடைந்தார். ஐந்து கப்பல்களுள் ஒன்று மாத்திரம் எஞ்சிற்று; 285 பேரில் 18 பேர் மட்டும் பிழைத்தார்கள்; ஆனால்,  'உலகம் உருண்டை' என்பதைத் தங்கள் அரிய முயற்சியால் நிரூபித்தனர்.

அர்ஜெண்டினாவுக்குத் தெற்கில் இரு பெருங்கடல்களையும் இணைக்கும் நீர்ப்பாதை அந்தத் தியாகியின் நினைவாய் Strait of Magellan என்று பெயர் பெற்றுள்ளது.

  15-ஆம் நூற்றாண்டில், ஸ்பானியர் Sebastian Cabot  தென்னமெரிக்கா சென்றுஅங்கே மக்கள் அணிந்திருந்த வெள்ளி நகைகளைக் கண்டு வியந்துவெள்ளிச் சுரங்கங்கள்  நிறைந்ததொரு பிரதேசத்தைக் கண்டு பிடித்ததாய்  நம்பி, ஒரு கழிமுகத்துக்கு Rio  de la Plata எனப் பெயர் வைத்தார். (அவரது மொழியில் plata =வெள்ளி)நாடு Argentina எனப்பட்டது. (லத்தீன் argentum  = வெள்ளி). தப்புக் கணக்கு என்பது தெரிந்த பின்பும் பெயர்கள் மாறவில்லை.

   கடைசி கடைசியாய் வெளிச்சத்துக்கு வந்தது ஆஸ்த்ரேலியாஅது டச்சுக்காரர் சாதனை. Tasman என்பவர் 17-ஆம் நூற்றாண்டில் ஒரு தீவை முதன்முதலாய் அடைந்தார்அக்கண்டத்திற்குத் தெற்கிலுள்ள அது Tasmania என்று அவரது பெயரைத் தாங்கி நிற்கிறது. 1770-இல் ஆங்கிலேயர் James Cook  கிழக்குப் பகுதியைக் கண்டு, அதற்கு New South Wales என்ற பெயரை சூட்டினார்.

  இவ்வாறு, பற்பல துணிச்சல்காரர்கள், உயிரைப் பணயம் வைத்துமுன்பின் தெரியாத பாதைகளில் பயணம் மேற்கொண்டு,   புதிய புதிய   நிலப் பகுதிகளைக் கண்டுபிடித்தமையால் முழு உலகத்தையும் அறிந்துகொண்டோம்.

                              \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\