Tuesday 2 October 2012

பக்கே ( Bacchae)


 

யூரிப்பிடீசின் தலைசிறந்த நாடகம் பக்கே என்கிறார்கள். வெள்ளையரின் பண்பாட்டு மாளிகைக்கான உறுதி வாய்ந்த அடித்தளங்களுள் ஒன்றாக இந்நாடகத்தைத் திறனிகள் மேற்கோள் காட்டுகின்றனர். 

இதில் ஆசிரியர்,
அளவு கடந்த பக்தி - வெறியாக மாறும்;
எல்லை தாண்டிய ஒழுங்கு - சமுதாயச் சர்வாதிகாரம் ஆகிவிடும்;
வரம்பு இழந்த கருத்துச் சுதந்தரம் - குழப்பம் விளைவிக்கும் 

என்று எடுத்துச் சொல்லி பக்திக்கும் பகுத்தறிவுக்கும் சட்டம் ஒழுங்குக்கும் கருத்துச் சுதந்தரத்துக்கும் சமநிலை தேவை என வற்புறுத்தியுள்ளாராம்.

 இக்கருத்துகளை நாகரிக உலகு நடைமுறைப்படுத்தக் காண்கிறோம். 

"அழகு என்றும் இன்பம்" என இந்நாடகத்தில் இடம்பெற்றுள்ள கருத்தை, 19ஆம் நூற்றாண்டு ஆங்கிலக் கவிஞர் ஜான் கீட்ஸ் தம் எண்டீமியான் ( Endymion ) என்னும் கவிதையின் முதலடியாக அமைத்துள்ளார். 

"அழகுப் பொருள் என்றும் இன்பம்" ( A thing of beauty is a joy for ever ) என்ற இந்த முதலடி ஆங்கில இலக்கிய உலகில் பெரிதும் பாராட்டப்படுகிறது. 

எண்டீமியான் கிரேக்கத் தொன்மத்தில் ஒரு பாத்திரம். இவனைத் தண்டிக்க எண்ணிய சீயஸ்இறப்பு அல்லது மீளா உறக்கம்இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கக் கட்டளை இட்டபோதுதூக்கத்தைத் தேர்ந்தான். 

நம் கும்பகர்ணன் நினைவுக்கு வருகிறான்: கடவுளிடம் நித்யம் (அழியாமை) என்னும் வரம் கோர விரும்பிய அவன் வாய் தவறி, நித்திரை என்று கேட்டுவிட்டானாம்.

திருமணத்தைப் பற்றி...


 

 
 
 
 திருமணம் என்பது ஒரு விசித்திரமான வட்டம். வெளியே இருப்பவர் உள்ளே நுழைய ஆர்வமாக இருக்கிறார்; உள் இருப்பவர் வெளிவர முடியாமல் தவிக்கிறார்.



 

பெண் நல்லவளோ கெட்டவளோ, கட்டாயம் திருமணம் செய்துகொள். நல்லவளாய் இருப்பின், வாழ்க்கை இன்ப மயம்; கெட்டவளாய் இருந்தால், நீ ஞானி ஆவாய்.
 
யாரோ சொன்னவை...