Monday 23 November 2015

பாரதிதாசன்

பாரதிதாசன் (1891 - 1964)





   கவிஞர்  பாரதிதாசனின்  இயற்பெயர்  கனக. சுப்புரெத்தினம்புதுச்சேரியில்  தோன்றியவர். தமிழகத்துக்கு  ஒரு பாரதியார்புதுச்சேரி மாநிலத்துக்கு  ஒரு  பாரதிதாசன்.

   சுப்பிரமணிய  பாரதியார் ஆங்கிலேயரின் அடக்குமுறைக்குத்  தப்பி  சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு வந்து பத்தாண்டுக் காலம் (1908-1918) வாழ்ந்தார்.

   அரசு  பள்ளிகளில் தமிழாசிரியராய்ப்  பணியாற்றிய சுப்புரெத்தினம், 1908 இல், வேணு  நாய்க்கர் என்பாரது இல்லத்தில் நிகழ்ந்த  திருமணத்தின்போதுபாரதியாருக்கு  அறிமுகமானார். இருவர்க்கும்  நெருக்கம்  உண்டாயிற்று.

   பாரதியாரைப் பெரிதும் மதித்த சுப்புரெத்தினம்அவர்மீது தாம்  கொண்ட பக்தியின் அடையாளமாய்த் தம் பெயரைப் பாரதிதாசன் என  மாற்றிக்கொண்டார்அவர் தந்த  ஊக்கம்  இவரைக் கவிஞராக்கியதுபக்திப் பாடல்கள்  புனைந்தார் , பாரதியாரின்  பாராட்டைப்  பெற்றார்

   1 --  மயிலம்  ஶ்ரீ  ஷண்முகன் வண்ணப்  பாட்டு.
   2 --  மயிலம் ஶ்ரீ  சிவஷண்முகக்  கடவுள்  பஞ்சரத்நம்.
   3 -- மயிலம்  ஶ்ரீ  சுப்பிரமணியர் துதியமுது.

ஆகியவை  அவருடைய  முதல்  நூல்கள்.

 ( மயிலம்  என்பது புதுச்சேரிக்கு அருகில்  உள்ள  தமிழ்நாட்டு  ஊர்).

   பாரதியார், 1928 இல், சென்னைக்குப்  போய்விட்ட  பின்புபாரதிதாசன்  பெரியாரின்  தொண்டராகித் தன்மானம், பகுத்தறிவு, நாத்திகம் முதலிய  முற்போக்குக்  கொள்கைகளைக்  கடைப்பிடித்து அவை  குறித்துத்  தீவிரமான  கவிதைகள்  இயற்றிப் "புரட்சிக் கவிஞர்" எனப்  போற்றப்பட்டார்கலப்புத்  தமிழை முதலில்  பயன்படுத்தியவர் பிற்பாடு  தனித்தமிழ்ப்  பற்றாளர் ஆகிப்  பிறமொழிச்  சொல்  கலவாமல்  பாடினார்.

   ஆயிரந்தலை  வாங்கிய  அபூர்வ  சிந்தாமணி, பொன்முடி முதலான  சில  படங்களுக்குப்  பாட்டும்  உரையாடலும்  எழுதினார்அபூர்வ  சிந்தாமணியின், "அன்னம்  நடை பயில  ஆயிழை  வராததினால்என்னும்  பாடல் இலக்கிய நயமுடையதுஅவரது  பல  பாடல்கள்  படங்களில் இடம்  பெற்றன:

   1 ---ஆலையின்  சங்கே
   2 --ஆடற்  கலைக்  கழகு
   3 --துன்பம் நேர்கையில்
   4 --வெண்ணிலாவும்  வானும்  போல 
   5 --தமிழுக்கும் அமுதென்று பேர்
   6 --வளமார் எமது  திராவிட நாடு
   7  --சங்கே  முழங்கு

   திராவிடர்  கழகத்திலிருந்து தி.மு.. பிரிந்தபோது பெரியாரின்  ஆதரவாளராய்  நீடித்தார்.

  பாரதியாரைப்  புகழ்ந்து  பலபல  கவிகளை  இயற்றியுள்ள  பாரதிதாசன்  1946 இல்  திருச்சி  வானொலியில் நிகழ்ந்த  கவியரங்கில்  நீண்டதொரு  பாவில்  அவரைப்  போற்றிப்  பாடினார்அதில்  சில  அடிகள்:

   பைந்தமிழ்த்  தேர்ப்பாகன்  அவனொரு
  செந்தமிழ்த்  தேனீ  சிந்துக்குத்  தந்தை
  நீடுதுயில்  நீக்கப்  பாடிவந்த நிலா
  காடுகமழும்  கர்ப்பூரச்  சொற்கோ.

 இறுதிக்காலம் வரை பார்ப்பன  எதிர்ப்பில் மும்முரங்  காட்டிய  பாரதிதாசன்  அந்தச் சாதி பாரதியாரின்மீது வைத்த மதிப்பை எள்ளளவுங்  குறைக்கவில்லை.

  புதுச்சேரி மாநில அரசு நிகழ்ச்சிகளில் பாரதிதாசனின், "வாழ்வினில் செம்மையைச்  செய்பவள்  நீயேஎன்ற  பாட்டு  தமிழ்த் தாய் வாழ்த்தாகப்  பாடப்படுகிறது.


  +++++++++++++++++++
படம் உதவி : இணையம்



Monday 16 November 2015

கவிஞரின் தாயார்




   மின்சாரம்  வராத  காலத்தில்பேய்  பிசாசு  பற்றிய  நம்பிக்கையும்  அச்சமும் நிறைந்திருந்தன;  இரவில், திருடர்  மற்றும்  தவிர்க்கமுடியாக்  காரணத்தால் வெளியே  போகவேண்டியவர் தவிர, மற்ற  எல்லாரும் இல்லத்தின்  உள்ளேயே  உறைந்தனர். மருண்டவன்  கண்ணுக்கு  இருண்டதெல்லாம்  பேயாய்த்  தோன்றி  நடுங்க  வைத்த  காலம்  அது! "ராத்திரி  ஒருவனைப் பேய் அடித்துவிட்டதுவாயாலும்  மூக்காலும் ரத்தம்  கக்கி  செத்துக்கிடந்தான்என, சில காலை வேளைகளில், மக்கள் பேசிக்கொண்டதைக்  கேட்டிருக்கிறேன். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நடந்த சுவை மிக்க நிகழ்ச்சியொன்றை நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம்தம் நூலொன்றில்  ("தாயார்  கொடுத்த  தனம்அல்லது  "என்  கதை"; சரியாக  நினைவில்லை; அறுபது ஆண்டுக்குமுன்பு வாசித்தது) விவரித்துள்ளார்:

 அவரது  தாயார் ஏட்டையாவின் (தலைமைக் காவலர்மனைவி.

  ஊரைப் பேயச்சம் பிடித்தாட்டிற்று; ஆனால் இவர், தாம் அஞ்சாதது  மட்டுமன்றி, 'அப்படியொன்று இல்லைஎன்று பெண்களிடம் கூறி விழிப்புணர்வு  ஏற்படுத்திக்கொண்டிருந்தார்.

  இருள் மண்டிய ஒரு மாலை வேளையில்தமது வீட்டின் கொல்லைப்  பக்கத்தில் சிறிது தொலைவில் இருந்த குளத்தில் நீர் மொண்டுகொண்டு வந்தபோது தமக்குப் பின்னால் மரக்கிளையின்  சலசலப்பு  கேட்டுத்  திரும்பிப்  பார்த்தார்; மரத்திலிருந்து குதித்த ஓர் உருவம் தலைவிரிகோலமாய்க் கைகளை அகல விரித்தபடி தம்மை நெருங்கக்கண்டு  உஷாரானார்அது ஓடி வந்து இவரை விரட்டியதுகொஞ்சமும் அஞ்சாமல் எதிர்த்துப் போராடித் தலையில்  குடத்தால்  ஓங்கி  மொத்தியவுடன்  ஓட்டம்  பிடித்தது.

   சில நாளுக்குப்பின்பு, தலையில் கட்டுடன் சந்தைக்கு வந்திருந்த ஓராள்  அங்கு இவரைப் பார்த்ததும், முகம் வேறுபட்டுப் பதுங்கவேஅவனைப்  பிடிக்கும்படி  தம்முடன்  வந்திருந்த  காவலரிடம்  சோன்னார்.

  தம்மைத்  தாக்கிய  பேய் அவன்தான்  என்பது  விசாரணையில்  தெரிந்தது.  அவன்  வாக்குமூலம் தந்தான்:

   பூசாரி பணம்  தந்து  ஏவினாராம்; மூட  நம்பிக்கைக்கு எதிராக  அந்த  அம்மா  பிரச்சாரம்  செய்வதால்  தம்மிடம் மாந்திரிகம்  செய்துகொள்ள  வருபவர்களின் எண்ணிக்கை  குறைவதாகவும் அவரைப்  பயமுறுத்திப் பேய் நம்பிக்கையை  உண்டாக்கினால்  வருமானம்  அதிகரிக்கும்  என்றும்  அவர்  சொன்னாராம்.

  இன்றைக்கும் பற்பலர் பேய் பிசாசு காத்து கருப்புக்குப் பயப்படுகையில்நூறு  ஆண்டுக்கு முந்தைய கால கட்டத்தில் ஒரு பெண்மணி பகுத்தறிவைப்  பயன்படுத்துபவராயும் நெஞ்சுரம்  மிக்கவராயும்  திகழ்ந்தமை  போற்றுதலுக்கு  உரியது.



    ***********

Monday 9 November 2015

காலனும் கிழவரும்


             



(இதுவும்  லா ஃபோந்த்தேன்  கதைதான்)

     ஒரு  முதியவர்,   நூறாண்டு  கடந்தவர்,   காலனிடம்  முறையிட்டார்:       "திடீரென வந்து உடனடியாகப் புறப்படக் கட்டாயப்படுத்துகிறாய்என்  முறியை  (உயில்இன்னம்  எழுதவில்லைபேரனுக்கு  வேலை  வாங்கித்  தரவேண்டும்வீட்டை எடுத்துக்  கட்ட வேண்டியிருக்கிறது. முன்தகவலாவது  தந்திருக்கலாமேகெடு  கொடுக்காமல்  உயிரைப்  பறிப்பது  நியாயமா?"

    காலன்  பதில்  சொன்னான்:

    "முதியவரேநான்  திடுதிப்பென்று  வரவில்லைநான்  அவசரக்காரன்  என    நியாயமின்றிப் புகார் செய்கிறீர். நீர்   நூறு  வயதைத்  தாண்டிவிடவில்லையாஉம்மையொத்த  வயதானவர் இரண்டு பேரைப் பாரிசில் காட்டும்பத்து  பேரைப்  பிரான்சில்  காட்டும்உமக்கு  நான்  முன்னெச்சரிக்கை  தந்திருக்க  வேண்டுமெனச்  சொல்கிறீர்.   நான்  எச்சரிக்கவில்லையா?   நடைஅசைவுஅறிவுஉணர்வு  எல்லாம்  படிப்படியாய்க்  குறைந்தனவேசுவை  குன்றியதுசெவி கேட்கவில்லையாவும் மங்கினஉம்  தோழர்கள்   செத்ததை  அல்லது   சாவுப் படுக்கையில்  விழுந்ததை   அல்லது   நோய்வாய்ப்பட்டதை   உம்மைக்  காணச்  செய்தேன். இவையெல்லாம்  என்ன,   முன்னறிவிப்பு   அல்லாமல்?

     போவோம் முதியவரேபேச்சில்லாமல்.   உமது  முறி  இல்லையென்றால்  நாட்டுக்கு  ஒரு  குறைச்சலும்  ஏற்பட்டுவிடாது".

       அறிவாளியைச்  சாவு   அதிரச்  செய்வதில்லைபுறப்பட  அவர்  எப்போதும்  தயார்பயணம் நெருங்கும் சமயத்தை முன்னறிவிப்புகள் மூலம்  உணர்ந்திருப்பதால்.  ஆயத்த நிலையில் இல்லாமையைக் காட்டிலும்  அறியாமை வேறில்லை.


***********************
(படம்; நன்றி இணையம்)