Monday 26 August 2013

யார் கட்டிவிட்ட கதைகள்?


இந்துக் கடவுள்களை இழித்தும் பழித்தும் கதைகள் புனையப்பட்டுள்ளன என்பதைப் பலரும் அறிவர். அவற்றை இயற்றியோர் எந்த மதத்தினர்?



வேறு சமயத்தார் அல்லஇந்துக்களேதான்! நீங்கள் நினைக்கலாம்,  "என்ன வியப்பு! தங்கள் தெய்வங்களைத் தாங்களே களங்கப்படுத்திக் கொள்வார்களோ?    நம்ப முடியவில்லை என்று;    ஆனால் உண்மை அதுதான்.

இந்து மதம்,   பிற சமயங்களைப் போல,    ஒரு மறைநூலை  (விவிலியம்குரான்) அடிப்படையாய்க் கொண்டதல்ல.  முற்கால இந்தியாவில்சமணம் பவுத்தம் அல்லாத ஆறு  வைதிக  சமயங்கள் கடைப்பிடிக்கப்பட்டன:

1  -  சிவனியம் (சைவ  சமயம்)  -  சிவன்  கடவுள்;
2  - வைணவம்  -   திருமால்  தெய்வம்;
3  -  சாக்தம்  -  அம்மன்  வழிபாடு;
4  -  கெளமாரம்  -  குமாரன்  (முருகன்)  கடவுள்;
5 -  காணாபத்யம் -  கணபதி போற்றல்;
6 -  செளரம்  -  சூரியன்  தெய்வம்.

  இறுதி  இரண்டும் வடக்கில்  பரவியிருந்தவை. முன்னது மகாராட்டிரத்திலிருந்து 7 ஆம்  நூற்றாண்டில் தமிழகத்துக்கு வந்தது;    மற்றது ஒடிசாவில் ஆதிக்கம் பெற்றிருக்கலாம்,    சூரியன் கோவில் அங்கிருக்கிறது.

  மேற்கண்ட ஆறு மதத்தாரும் தத்தம் கடவுள்களை உயர்த்தியும் பிற தெய்வங்களைத் தாழ்த்தியும் கதை எழுதினார்கள்.

  1  -  சிவனே முழுமுதற் கடவுள். வானத்திலிருந்து பிரவாகமாய்ப் பொங்கிப்   பெருக்கெடுத்து பூமியின்மீது பாய்ந்த கங்கையைத் தம் சடையினால் தாங்கி    வெள்ளப் பேரழிவிலிருந்து உலகத்தைக் காத்தவர்.  ஆலகால நஞ்சை உண்டு தேவர்களைக் காப்பாற்றியவரும் அவரே.
திரிபுரத்தைத் தாக்கப் போனபோது அவரது அம்பாய்ப் பயன்பட்டவர் திருமால்;    அவரது அடியையும் முடியையும் காண்பதற்குச் சென்ற திருமாலும் பிரம்மனும் எவ்வளவோ முயன்றும் முடியாமல் தோற்றுத்   திரும்பினர்.

  சிவனின் பெருமையைப் பறை சாற்றும் நூல்கள் பெரிய புராணம்தேவாரம்திருவாசகம் முதலியன.

 2   --  திருமாலே பெரிய  கடவுள். அவரது காலில்  உற்பத்தி ஆகிற கங்கை   சிவனின் தலைமேல் இருக்கிறாள்.  பஸ்மாசுரனுக்கு அஞ்சி ஓடிய சிவனைத்  திருமால்தான்,   மோகினி வடிவில் போய்,    அசுரனை அழித்துச்    சிவனைக் காப்பாற்றினார்.

  வைணவ நூல்கள் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்திருப்பாவை.

   3  -    காளிமாரிதுர்க்கைபராசக்திபைரவிசாமுண்டி  என  அம்மனுக்குப் பல பெயர்  உண்டு.  சமயபுரம்மேல்மருவத்தூர்மதுரைகாஞ்சிகன்னியாகுமரி முதலானவை சக்தி பீடங்கள்.  வங்காளத்தில் துர்கா பூஜை ஒரு பெரிய விழா.

    சக்தி இல்லாமல் சிவனில்லை என்பது சாக்தத்தின் முழக்கம். சக்தியைவிடச் சிவன் பெரியவர் என்பதற்குச் சிவனியர் சொல்லும் கதை காலைத் தூக்கி ஆடிய சிவனைப் போல் ஆட முடியாமல்,    போட்டியில் காளி தோற்றாள் என்பது. பார்வதியின் அழுக்கிலிருந்து உருவானவர் கணபதி என்று அவரை மட்டம் தட்டுகிறது சாக்தம்.


    சக்தியைத் துதிக்கும் நூல்: அபிராமி அந்தாதி.

  4  --  சிவனைக் கீழே பணிவுடன் அமரச் செய்து தாம் மேலே இருந்து உபதேசம் செய்தவர் முருகன்சிவனுக்கே குருவாய் விளங்கியதால்,    தகப்பன்சாமி,    குருசாமி,    குருபரன்,    குருநாதன் என்றெல்லாம் துதிக்கப்படுகிறார் முருகன்.  

அவரைப் போற்றும் நூல்கள் திருமுருகாற்றுப்படை,    திருப்புகழ்,   கந்தர் அனுபூதி,    கந்தர் அலங்காரம், சேயூர் முருகன் உலா,    திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்  முதலியன.

  5  -- எல்லாத் தெய்வங்களுக்கும் முந்தித் தொழவேண்டிய பெருமை உடையவர் கணபதி என்பது இம்மதத்தாரின் வாதம். முருகனைத் தோற்கடித்துப் பழத்தைப் பெற்ற கணபதி அவரைவிட அறிவாளிஅவர் வள்ளியை வசப்படுத்த யானை வடிவில் வந்து உதவியவர்.

  விநாயகர் அகவல் என்னும் நூல் பிள்ளையார்மீது பாடப்பட்டது.

  6  -  சூரிய நமஸ்காரம் இச்சமயத்தாரின் கண்டுபிடிப்பு.

  8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரர் ஆறு மதங்களையும் ஒன்றாக்கினார். ஆதலால் அவர், " ஷண்மத ஸ்தாபகர் எனப்படுகிறார். (ஷண்மதம் =  ஆறு மதம்;    ஷண்முகம் =  ஆறுமுகம்.) காலப்போக்கில் வைணவம் தனியாகவும் மற்ற ஐந்தும் சிவனியமாகவும் பிரிந்தனஇன்று   இந்த இரண்டு சமயங்களே பின்பற்றப்படுகின்றன.


                                  ++++++++++++++++++++++
(படத்துக்கு நன்றி: கூகுள்)

Sunday 18 August 2013

கருமி (தொடர்ச்சி 3)

  
அங்கம் - 1  காட்சி - 4  (தொடர்ச்சி)

பாத்திரங்கள் :
அர்ப்பாகோன் - பெருஞ் செல்வர்கடைந்தெடுத்த கருமி.  
எலீஸ் - மகள் 
(மகனும் மரியானும் காதலர்; எலீஸ் வலேரை விரும்புகிறாள். இருகாதலும் அர்ப்பாகோனுக்குத் தெரியாது)


அர்ப்பாகோன் வலேர், நீ சொல்லு. எனக்கும் மகளுக்கும் ஒரு தகராறு. யார் பக்கம் நியாயம் என்று சொல்வாயா?

வலேர்  நிச்சயமாக உங்கள் பக்கந்தான் நியாயம்.

அர்ப்பாகோன்- எதைப் பற்றிப் பேசுகிறோம் என்பதை நீ நன்றாக அறிவாயா?

வலேர்  இல்லை, ஆனால் நீங்கள் தவறு செய்ய மாட்டீர்கள்.

அர்ப்பாகோன்இன்று மாலை இவளுக்கு ஒரு நல்ல மற்றும் பணக்கார மனிதரைக் கணவராக்க விரும்புகிறேன். இவளோ, மாட்டேன் என்று என் முகத்துக்கு எதிராகச் சொல்லுகிறாள். நீ என்ன சொல்கிறாய்?

வலேர்  நான் சொல்வதா?

அர்ப்பாகோன்ஆமாம்.

வலேர்  -  பொதுவாக உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன். நீங்கள் சொல்வது எப்போதும் சரியானது என்றும் சொல்கிறேன். ஆனாலும் அவள் கருத்து  அடியோடு தவறல்ல...

அர்ப்பாகோன்-என்னது? ஆன்சேல்ம் பிரபு பெருந்தன்மை உள்ளவர், உயர்வானவர், பணக்காரர். முதல் கல்யாணத்துப் பிள்ளைகளை இழந்தவர். அவரைவிட மேலானவர் கிடைப்பாரா?

வலேர்  அது மெய்தான். இவள் உங்களிடம் கூறக்கூடும் இது கொஞ்சம் அவசரப்படுவதுசிறிது காலம் வேண்டும் தன்னால் ஒத்துப்போக முடியுமா என்று யோசிக்க ...

அர்ப்பாகோன்உடனே பிடித்துக்கொள்ள வேண்டிய வாய்ப்பு இது . வேறெங்கும் காணமுடியாத ஒரு சாதக அம்சத்தை இதில் காண்கிறேன். வரதட்சணை இல்லாமல் கல்யாணத்துக்கு ஒத்துக்கொள்கிறார்.

வலேர்  -  வரதட்சணை இல்லாமல்!

அர்ப்பாகோன்ஆமாம்.

வலேர்  ! இனி நான் சொல்ல ஒன்றுமில்லை. இது மிக வலுவான காரணம்.     இதை ஏற்க வேண்டியதுதான்.

அர்ப்பாகோன்எனக்கு இது கணிசமான சேமிப்பு.

வலேர்  -  கண்டிப்பாக; எதிர்க் கருத்துக்கு இடமில்லை. உஙகள் மகள் உங்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடும், கல்யாணம் என்பது மிக முக்கியமான விவகாரம், வாழ்க்கை முழுதும் இன்பம் அல்லது  துயரம் தருவது, வாழ்நாள் முழுவதுக்குமான ஓர் ஏற்பாட்டை ஆழ்ந்த முன்னெச்சரிக்கையுடன் தீர்மானிக்க  வேண்டும் என்று.

அர்ப்பாகோன்வரதட்சணை இல்லை!

வலேர்  -  நீங்கள் சொல்வது சரிஇது எல்லாவற்றையும் முடிவு செய்கிறது.   சிலர் இருக்கிறார்கள், அவர்கள் உங்களிடம் சொல்லலாம், இந்த மாதிரி விஷயத்தில் பெண்ணின் விருப்பம் மதிக்கப்பட வேண்டும் என்றும் வயது, விருப்பு வெறுப்பு, உணர்ச்சிகள் ஆகியவற்றில் இருவர்க்கும் இடையே உள்ள பெருத்த வேறுபாடு இந்த மணத்தில் வருந்தத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றும்.

அர்ப்பாகோன்வரதட்சணை இல்லையே!

வலேர்  -  ! இதற்கு மாற்றுக் கருத்து இல்லை. இது  எல்லார்க்கும் நன்றாகத் தெரியும்; இதை ஏற்காதவர் யார் இருப்பார்? என்றாலும் நிறையத் தந்தைமார்கள் பணத்தைக் காட்டிலும் புதல்விகளின் திருப்தியே மேலானது எனக் கருதுகிறார்கள்; தன்னலத்துக்காகப் பெண்களைப் பலி கொடுக்க விரும்பாத அவர்கள், ஒரு கல்யாணத்தில்மற்ற எல்லாவற்றையும்விட, மனப்  பொருத்தத்தைத் தேடுகிறார்கள்இந்தப் பொருத்தந்தான் மகிழ்ச்சி நிம்மதி கெளரவம் முதலானவற்றை நிரந்தரமாகத் தரும் என்பது அவர்களின் முடிவு. மேலும்  ...

அர்ப்பாகோன்-  (தோட்டத்துப் பக்கம் பார்த்து) தமக்குள்: அங்கே ஒரு நாய் குரைப்பது என் காதில் விழுவதாகத் தோன்றுகிறது. என் பணத்தைக் குறி வைக்கிறார்களோ?

   வலேரிடம் : இங்கேயே இரு. இதோ வந்துவிடுகிறேன்.

                        (போகிறார்)
                                                                           (முடிந்தது)
                                     +++++++++++++++++++++++

.