Thursday 7 February 2013

பழமொழிகளில் ஊர்கள்



ஊர்ப் பெயர் தாங்கிய தமிழ்ப் பழமொழிகளுள் எனக்குத் தெரிந்த சிலவற்றைப் பதிகிறேன்:

 

1 - ஆயிரம் ஆனாலும் மாயவரம் ஆகாது .

 

2 - காசிக்குப் போனாலும் கர்மம் தொலையாது.

 

3 - காஞ்சிக்குப் போனால் காலாட்டிப் பிழைக்கலாம்.

 

4 - தங்கச்சி தாராளம் இஞ்சிக்குடி பேராளம்.

 

5 - தென்காசி ஆசாரம் திருநெல்வேலி உபசாரம்.

 

6 - தில்லைப் பெண் எல்லை தாண்டாள்.

 

7 - தில்லிக்கு ராஜா ஆனாலும் தல்லிக்குப் பிள்ளைதான்.

 

8 - திருநெல்வேலியான் தேர் பாரான் திருச்செந்தூரான் கடலாடான்.

 

9 - காரைக்கால் ரோட்டைப் பார் காதர்சுல்த்தான் வீட்டைப் பார்.

 

10 - காஞ்சியில் பிறக்க முக்தி காசியில் இறக்க முக்தி.

 

11 - தன்னைப் பெற்ற தாய் கிண்ணிப் பிச்சை எடுக்கிறாள்,

தம்பி கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான்.