அ முதல் ன் வரையுள்ள எழுத்துகள் கொண்ட நெடுங்கணக்கை நாம் பயன்படுத்துகிறோம்; இதைத் தமிழர் உருவாக்கவில்லை. அதனால்தான் ற் ன் என்ற இரண்டு எழுத்துகளும்
இறுதியில் தள்ளப்பட்டன. வரிசை
எப்படி இருந்திருக்க வேண்டும்?
க் ங் , ச் ஞ் , ட் ண் , த் ந் , ப் ம் ,
ற் ன் .
( கசடதபற ); ய் ர் ல் வ்,ழ்,ள் ( யரலவழள
). இப்படி.
அசோகரின் கல்வெட்டுக்கள் பிராமி என்னும் எழுத்தில் செதுக்கப்பட்டுள்ளன;
அசோகரின் கல்வெட்டுக்கள் பிராமி என்னும் எழுத்தில் செதுக்கப்பட்டுள்ளன;
பிராமியில் ற் ன் இல்லை.
அந்த பிராமி தமிழகத்துக்கு வந்தபோது, நம் மொழிக்குத் தேவைப்பட்ட சில
வேறுபாடுகளை அதில் செய்து உருவாக்கியது தமிழ் பிராமி எனப்பட்டது . காலத்தால்
முற்பட்ட தமிழ்க் கல்வெட்டுகள் (கி. மு. 2 ஆம் நூற்றாண்டு) தமிழ் பிராமியில் உள்ளன.
அந்த எழுத்து, காலப் போக்கில் உருமாறி, வட்டெழுத்து எனப் பெயர் பெற்றது.
அதிலிருந்து தோன்றியது இன்றைய நெடுங்கணக்கு. இது தொல்காப்பியருக்கு முன்பே
புழக்கத்தில் இருந்தமை,
'அகர முதல் னகர இறுவாய்'
(அ முதல் ன் இறுதி)
என்னும் நூற்பாவால் தெரிகிறது.
அசோகரின் பிராமியில் எ ஒ என்ற ஒலிகள் குற்றொலிகள் அல்ல; அவை ஏ ஓ என
நீட்டி உச்சரிக்கப்பட்டன; தமிழுக்குக் குற்றொலிகள் வேண்டுமே! மேலே புள்ளி
வைத்து சமாளித்தார்கள்.
அதாவது: எ ஒ ---- உச்சரிப்பு ஏ ஓ;
--- உச்சரிப்பு எ ஒ.
இதைத் தொல்காப்பியம் தெரிவிக்கிறது:
மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல் ;
எகர ஒகரத்து இயற்கையும் அற்றே.
பொருள்: மெய் எழுத்தின்மேல் புள்ளி இட வேண்டும்; எ ஒ வுக்கும் அப்படியே.
13 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நன்னூலும் அதை வழிமொழிகிறது:
தொல்லை வடிவின எல்லா எழுத்தும் ஆண்டு
எய்தும் எகர ஒகர மெய் புள்ளி.
பொருள் : எ ஒ ஆகியவற்றுக்கும் மெய்யெழுத்துகளுக்கும் புள்ளி வைக்கவேண்டும்.
உயிர்மெய் எழுத்துகளுக்கும் இது பொருந்தும்:
பெ , பொ ------ உச்சரிப்பு -- பே , போ
உச்சரிப்பு -- பெ, பொ.
2000 ஆண்டாகத் தமிழர் அப்படித்தான் எழுதிவந்தனர் .
18 ஆம் நூற்றாண்டில், இத்தாலியிலிருந்து தமிழகம் வந்து தமிழ் பயின்ற வீரமாமுனிவர்,
ஒழுங்குபடுத்தினார் ; அதன்படி,
எ , ஒ ----- ----
------ உச்சரிப்பு: எ , ஒ . (குற்றொலிகள்);
ஏ , ஓ ------
--- --- உச்சரிப்பு: ஏ , ஓ .
(நெடில்கள் ) .
பெ , பொ ---
--- -- பெ , பொ (குறில் )
;
பே , போ
--- --- பே , போ .
(நெடில்)
குறிலுக்கான புள்ளி ஒழிக்கப்பட்டு
ஓரளவு சீர்மை ஏற்பட்டது.
20
ஆம் நூற்றாண்டில் பெரியார்
ஈ , வே. ராமசாமி அதுவரை புழக்கத்தில் இருந்த
சில ஒழுங்கற்ற வடிவங்களையும்
திருத்தினார். அவை:
அவற்றை முறையே றா, னா , ணா,, லை, ளை, னை, ணை எனச் சீரமைத்துத் தமது இயக்க
ஏடுகளில் எழுதிப் பரப்பினார். திராவிடர் கழகத்தினர் அனைவரும் அவரைப் பின்பற்றினர் .
அதைச் சட்டப்படி
அமல்படுத்தத் தமிழர் எவரும்
அக்கறை செலுத்தவில்லை.
எம். ஜி.
ஆர். தான் அந்தப் பெருமைக்கு உரியவரானார். அவரால் குறைந்தன
தமிழ் கற்போரின் சிரமங்கள்.
ஓர் இத்தாலியர், ஒரு கன்னடியர், ஒரு மலையாளி எனத் தமிழைத் தாய்மொழியாய்க் கொள்ளாதவர்களே நம் நெடுங்கணக்கை ஒழுங்குபடுத்தினர் !
++++++++++++++++++++++++++++++++++