Thursday 30 April 2015

தமிழ் நெடுங்கணக்கு (Alphabet)

   
    முதல்  ன்  வரையுள்ள   எழுத்துகள்  கொண்ட   நெடுங்கணக்கை   நாம்  பயன்படுத்துகிறோம்; இதைத்  தமிழர்   உருவாக்கவில்லை. அதனால்தான்  ற் ன்  என்ற  இரண்டு  எழுத்துகளும்  இறுதியில்  தள்ளப்பட்டன.    வரிசை  எப்படி  இருந்திருக்க  வேண்டும்?

    க் ங் , ச் ஞ் , ட் ண் ,  த் ந் , ப் ம் , ற் ன் .  ( கசடதபற );  ய் ர் ல் வ்,ழ்,ள் ( யரலவழள ). இப்படி.

அசோகரின்  கல்வெட்டுக்கள்   பிராமி   என்னும்  எழுத்தில்   செதுக்கப்பட்டுள்ளன;  
பிராமியில்    ற் ன்  இல்லை.   

  அந்த  பிராமி  தமிழகத்துக்கு  வந்தபோதுநம்  மொழிக்குத்  தேவைப்பட்ட   சில 
வேறுபாடுகளை   அதில்   செய்து   உருவாக்கியது  தமிழ்  பிராமி  எனப்பட்டது . காலத்தால்  
முற்பட்ட   தமிழ்க்   கல்வெட்டுகள்  (கி. மு. 2 ஆம்  நூற்றாண்டுதமிழ்  பிராமியில்   உள்ளன.

     அந்த   எழுத்துகாலப்  போக்கில்  உருமாறி,   வட்டெழுத்து   எனப்  பெயர் பெற்றது.  
அதிலிருந்து  தோன்றியது  இன்றைய  நெடுங்கணக்கு.   இது  தொல்காப்பியருக்கு   முன்பே    
புழக்கத்தில்  இருந்தமை

                         'அகர   முதல்  னகர  இறுவாய்'
                               (  முதல் ன் இறுதி)

என்னும்   நூற்பாவால்  தெரிகிறது.

     அசோகரின்   பிராமியில்      என்ற  ஒலிகள்  குற்றொலிகள்  அல்லஅவை     என   
நீட்டி  உச்சரிக்கப்பட்டனதமிழுக்குக்   குற்றொலிகள்  வேண்டுமேமேலே  புள்ளி  
வைத்து   சமாளித்தார்கள்.
       அதாவது:        ----  உச்சரிப்பு     ;





--- உச்சரிப்பு     .
       இதைத்   தொல்காப்பியம்  தெரிவிக்கிறது:

                மெய்யின்  இயற்கை  புள்ளியொடு  நிலையல் ;
                எகர  ஒகரத்து   இயற்கையும்  அற்றே.

     பொருள்:  மெய்  எழுத்தின்மேல்  புள்ளி  இட  வேண்டும்;     வுக்கும் அப்படியே.
      13  ஆம்  நூற்றாண்டில்  இயற்றப்பட்ட    நன்னூலும்  அதை வழிமொழிகிறது:

               தொல்லை   வடிவின   எல்லா   எழுத்தும் ஆண்டு
               எய்தும்    எகர  ஒகர   மெய்  புள்ளி.

     பொருள் :         ஆகியவற்றுக்கும்    மெய்யெழுத்துகளுக்கும்  புள்ளி  வைக்கவேண்டும்.

     உயிர்மெய்  எழுத்துகளுக்கும்  இது  பொருந்தும்:
          பெபொ  ------    உச்சரிப்பு --  பே , போ






உச்சரிப்பு  -- பெபொ.
     2000  ஆண்டாகத்   தமிழர்  அப்படித்தான்  எழுதிவந்தனர் .
    18 ஆம்  நூற்றாண்டில்இத்தாலியிலிருந்து  தமிழகம்  வந்து  தமிழ்  பயின்ற   வீரமாமுனிவர்,    
ஒழுங்குபடுத்தினார் ;  அதன்படி,

                 எ , ஒ -----  ----  ------  உச்சரிப்பு:  எ ,  ஒ .  (குற்றொலிகள்);
                 ஏ ,   ஓ ------   --- ---     உச்சரிப்பு: ஏ , ஓ .  (நெடில்கள் ) .
                  பெ , பொ  ---  --- --                       பெ , பொ    (குறில் )  ;
                  பே  , போ   ---    ---                        பே ,   போ .   (நெடில்)

      குறிலுக்கான   புள்ளி  ஒழிக்கப்பட்டு   ஓரளவு  சீர்மை  ஏற்பட்டது.

      20  ஆம்    நூற்றாண்டில்     பெரியார்  ஈ , வே.  ராமசாமி  அதுவரை    புழக்கத்தில்  இருந்த   சில  ஒழுங்கற்ற  வடிவங்களையும்  திருத்தினார்.   அவை:











அவற்றை  முறையே    றா,  னா , ணா,,  லை, ளை,  னை,  ணை    எனச்  சீரமைத்துத்   தமது  இயக்க
ஏடுகளில்   எழுதிப்   பரப்பினார்.   திராவிடர்  கழகத்தினர்   அனைவரும்    அவரைப்  பின்பற்றினர் .  
அதைச்  சட்டப்படி  அமல்படுத்தத்   தமிழர்  எவரும்   அக்கறை   செலுத்தவில்லை.  
எம். ஜி.  ஆர்.   தான்   அந்தப்   பெருமைக்கு   உரியவரானார். அவரால்  குறைந்தன  தமிழ்  கற்போரின்  சிரமங்கள்.

    ஓர்   இத்தாலியர்,  ஒரு  கன்னடியர்,  ஒரு  மலையாளி  எனத்  தமிழைத்  தாய்மொழியாய்க்   கொள்ளாதவர்களே  நம்  நெடுங்கணக்கை  ஒழுங்குபடுத்தினர் !
                                      
                                            ++++++++++++++++++++++++++++++++++

Wednesday 15 April 2015

நூற்பா வரிசை


   இலக்கணவிதிகளைக் கூறும் செய்யுள்கள் வட  மொழியில் சூத்திரங்கள்  எனவும் தமிழில் நூற்பாக்கள் எனவும் சுட்டப்படுகின்றன. அவை அமைகிற வரிசையை அழகிய சொற்றொடரால் நன்னூல் குறிப்பிடுகிறது; அந்த வரிசை நான்கு வகைப்படும்:

    1   --   ஆற்றொழுக்கு  --  ஒரு  விதியைக்  கூறும்  ஒரு   சூத்திரம்அதற்குத்  தொடர்புடைய  அடுத்த  சூத்திரம்இப்படித்  தொடர்ந்து  செல்லும்  வரிசைக்கு  ஆற்றொழுக்கு  என்று  பெயர்.

   ஆற்றில்  நீர்  ஓடுகிறதுஅதைத்   தொடர்கிறது   பின்னால்  வரும்  நீர்இதை  மனத்திற்   கொண்டு  சூட்டிய  பெயர்.

   2  --    அரிமா  நோக்கம் -   பல   நூற்பாக்களையடுத்து  இடம்  பெறும்  ஒரு  சூத்திரமானது, தனக்கு முன்னால் உள்ள அத்தனைக்கும் பொதுவான  விதியைச்  சொன்னால்அது   அரிமா  நோக்கம்.

         அரிமா  என்பது  சிங்கம்;   அது  கொஞ்ச  தொலை  நடந்து  சென்றபின் ,  நின்று,     தான்  கடந்து   வந்த   பாதையைத்    திரும்பிப்   பார்க்குமாம்.  (மெய்  தானா  என்பது விலங்கு நூலார்க்குத்தான் தெரியும்). அப்படி சிங்கம்  நோக்குவது   போல்,   இந்த   நூற்பா, முந்தைய   பாக்களைத்  தழுவி,  விதி   சொல்கிறது  அல்லவா?

   3  --  தவளைப்  பாய்த்து --   அதாவது  தவளைப்   பாய்ச்சல்:   தவளைஓரிடத்திலிருந்து   வேறிடத்துக்குப்  பாயும்போதுஇடையில்  ஒரு   சிறு  நிலப்  பகுதியைத்   தாண்டுகிறது  அல்லவா?

 ஒரு பா இருக்கிறது;   இதற்கும்  அடுத்த  சில   பாக்களுக்கும்  தொடர்பு   இல்லை;  ஆனால்,  அதன்பின்பு  வரும் பாவுடன் தொடர்பு கொள்கிறது.  காட்டாக 28-  ஆம்   பாவின்   விதியும்   33 - ஆம்   சூத்திரத்தின்   விதியும்   சம்பந்தம்  உடையது.  இதுதான்  தவளைப்  பாய்த்து.  நான்கு  பாக்களைத்   தாண்டிவிடுகிறது.   

   4  --  பருந்தின்   வீழ்வு    ----   பல  நூற்பாக்கள்     ஆற்றொழுக்காகத்  தொடர்ந்து  செல்ல,   அடுத்து  வரும்  ஒன்று,   தனக்கு  முன்னால்  உள்ள    எல்லாப்  பாக்களுக்கும்   மட்டும்   அன்றி,   பின்னால்  வரப்  போகிற  சிலவற்றுக்கும்  பொருந்தும்   ஒரு  விதியைச்  சொன்னால்அது   பருந்தின்   வீழ்வு  (bird's  eye view).

 பருந்தானது  மேலே  வட்டம்  அடித்துக்கொண்டு  கீழேயுள்ள  எல்லாவற்றையும்   கவனிப்பது  போன்றது.

                                    நன்னூல்:

                    ஆற்றொழுக்கு      அரிமா     நோக்கம்    தவளைப்
                     பாய்த்துப்   பருந்தின்வீழ்வு  அன்னசூத்  திரநிலை.

     ஒரு    கட்டுரையிலும்  இந்த    நான்கு  நிலைகளைக்    காணலாம்:

    தொடர்ச்சியாகக்  கருத்துகளை  அடுக்கினால்ஆற்றொழுக்கு.   முன்னால்  உள்ள   சில  பத்திகளின்  எல்லாக்   கருத்துகளுக்கும்  தொடர்புடைய  பொதுவான  ஒரு  கருத்தைச்  சொல்வது  அரிமா  நோக்கம்.    4 ஆம்  பத்தியின்   கருத்தை    7 ஆம்    பத்தியில்   நினைவுபடுத்தி  மேலும்  அதை  விளக்குவது   தவளைப்   பாய்த்து . முன்னால்  எழுதியதுபின்னால்   சொல்லப்போவது,    யாவற்றையும்  தழுவும்  கருத்துபருந்தின்  வீழ்வு.  


                                 ============================