Monday 27 February 2017

பிள்ளையின் பாசம்


    (நான் மொழிபெயர்த்த மொப்பசானின் கதைகளுள் இதுவும் ஒன்று;  2014 பிப்ரவரி மஞ்சரியில் பிரசுரமானது)



  
அந்தச் சிற்றூரிலிருந்த ஒரு குன்றின் அடிவாரத்தில், அடுத்தடுத்து அமைந்திருந்தன இரு குடிசைகள். அவற்றில் வசித்தவர்கள், வளங்குறைந்த  மண்ணுடன் போராடித்தான் தங்கள் குழந்தைகளை வளர்க்க வேண்டியிருந்தது; குழந்தைகளுக்குப் பஞ்சமில்லை: குடிசைக்கு நான்கு!  பகல் முழுதும்  தெருவில் விளையாடிப் பொழுது போக்கினார்கள். துய்வாஷ் குடும்பத்தில் மூன்று சிறுவர்களும் ஒரு சிறுமியும்; வல்லேன் குடும்பத்தில், மூன்று பெண், ஓர் ஆண். கஷ்ட ஜீவனம்; சூப், உருளைக்கிழங்கு, தூய காற்று ஆகியவையே முக்கிய உணவு.

  ஒரு பிற்பகல்; குதிரை வண்டியொன்று குடிசைகளின் எதிரே திடீரென நின்றது. ஓட்டி வந்த பெண், தன் பக்கத்தில் இருந்தவரை நோக்கி, " அதோ பார்ஆன்ரி, அந்தக் குழந்தைக் கூட்டத்தை. அவர்கள் புழுதியில் கும்மாளம் போடுவதும் அழகாகத்தான் இருக்கிறது" என்றாள். அவர் பதிலொன்றும் சொல்லவில்லை. திருமதி துய்ப்ளிஏரின் இந்த வியப்புப் பேச்சு அவருக்குப் பழக்கமானதுதான்அது அவருக்குத் துயரந் தரும்தம்மீது அவள் குற்றஞ் சுமத்துவதுபோல் அவருக்குத் தோன்றும்.

 அவள் தொடர்ந்தாள்: "அவர்களை நான் கொஞ்ச வேண்டும்அதோ அந்தக் குழந்தையைப்போல எனக்கு ஒன்று இருந்தால்!"

Wednesday 15 February 2017

திருக்குறள் அறிமுகவுரை

  
நூல்களிலிருந்து -- 11





பேராசிரியர் தொ. பரமசிவன்



  பேராசிரியர் தொ. பரமசிவனின் கட்டுரைகள், 'உரைகல்என்னுந் தலைப்புடன் நூலாக 2014-இல் வந்துள்ளன. அவற்றுள் ஒரு பகுதியைப் பகிர்கிறேன்தலைப்பு:

                     திருக்குறள் அறிமுகவுரை

  "திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஒன்பது அறிஞருள் ஒருவராகிய Kindersly  1810-இல்சில பகுதிகளை முதன்முதலில் அச்சு வாகனம் ஏற்றினார். அதே கால அளவில், எல்லீசன் எனத் தம் பெயரைத் தமிழாக்கியவரும் அன்றைய சென்னை மாநிலத் தலைமை நிதி அதிகாரியுமான F.N.Ellis  வள்ளுவதாசராய் வாழ்ந்திருக்கிறார். 1818-இல்சென்னையில் உருவான குடிநீர்த் தட்டுப்பாட்டினைப் போக்க, எல்லீஸ் வெட்டிய கிணறுகளுள் ஒன்று, சென்னை ராயப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோயிலில் இன்றும் உள்ளதுஇக்கிணற்றின் கைப்பிடி சுவரில் வெட்டி வைத்த கல்வெட்டு இன்றளவும் நம்  பார்வைக்கு உள்ளது. அதில்,

Monday 6 February 2017

வல்லவனுக்கு வல்லவன் -- 5


காட்சி - 6
இடம் -- தெரு.   
பாத்திரங்கள் -- பாத்லேன்,  திபோ


பாத்லேன்-- என்னஇளைஞனே,   காரியத்தை நன்றாய் முடித்தேனா?
திபோ -- பே!
பாத்லேன் -- வழக்கு முடிந்துவிட்டது; இனிமேல், பே வேண்டியதில்லை. உனக்கு 
நல்ல யோசனை சொன்னேன், அல்லவா?
திபோ -- பே!
பாத்லேன் --- பயப்படாதே; இனி யாரும் உன்னை ஒன்றுஞ் செய்ய முடியாது. 
நன்றாய்ப் பேசலாம். என் கட்டணத்தைக் கொடு.
திபோ -- பே!
பாத்லேன் -- உன் பே தேவையில்லை; பணந்தான் தேவை.
திபோ -- பே!
 பாத்லேன் -- என்னகிண்டலா? தண்டனை கிடைக்காமல் காப்பாற்றினதற்குத் 
தொகை கொடுசீக்கிரம்.
திபோ -- பே!
பாத்லேன் -- பேசினபடி பணந் தரப் போகிறாயா, இல்லையா?
 திபோ -- பே!

                      (போகிறான்)

பாத்லேன் -- எவரையும் ஏமாற்ற என்னால் முடியும் என்று நினைத்திருந்தேன்;
என்னைவிடப் பெரிய ஆளாய் இருக்கிறான், ஆடு மேய்க்கிறவன்.

                                                   (முடிவு)

குறிப்பு: இந்த நாடகத்திலிருந்து பிறந்ததே, 'உனக்கும் பேபேஉங்கப்பனுக்கும் 
பேபே' என்ற பழமொழி; பிரஞ்சிந்தியாவில் உருவானது அது.

                                                   [[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[