Saturday, 22 September 2012

வள்ளல்கள்


 
 
பழங்காலத்தில் வாழ்ந்த வள்ளல்கள் ஏழு பேர் என்ற பொருளில் கடையெழு வள்ளல்கள் என்கிறோம். ஆனால் அப்போது புலவர்களைப் புரந்த வேறு பலரும் சங்க இலக்கியங்களுள் இடம் பெற்றிருக்கிறார்கள்.
 

அவர்கள் கொண்கானங்கிழான், சிறுகுடி கிழான் பண்ணன், தோயன் மாறன், நல்லியக் கோடன், நன்னன் சேய் நன்னன், நாஞ்சில் வள்ளுவன், பிட்டங்கொற்றன், வல்லார் கிழான் பண்ணன் ஆகியோர்.
 

குமணனைப் பாடிய பெருஞ்சித்திரனார் என்னும் புலவர் ஏழு வள்ளல்களைப் பற்றி மட்டும் தம் பாவில் குறிப்பிட்டதால் கடையெழு வள்ளல் என்கிற தொடர் பிறந்தது. மற்ற வள்ளல்களை ஏன் அவர் சேர்க்கவில்லை? அந்த எழுவரை மாத்திரமே அவர் அறிந்திருக்கலாம்.

மீன் தருவதை விட ............


 

ஒருவருக்கு மீன் தருவதைக் காட்டிலும் அவருக்கு மீனைப் பிடிக்கக் கற்றுத் தருவது மேல் என்ற அறிவுரை கேள்விப்பட்டிருக்கிறோம். 

அதைச் சொன்னவர் கி. மு. 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சீனத் தத்துவ அறிஞர் லாவோ ட்சு ( LAO TZU ).
 

அவர் கூறியது: 

" நீங்கள் ஒரு மனிதனுக்கு ஒரு மீனை ஈவது ஒரு நாளுணவை அளிப்பதாகும்; மீன் பிடிக்க அவனுக்குக் கற்றுத் தருதல் வாழ் நாள் முழுதும் உணவு வழங்குவதாகும்"

 

Sunday, 16 September 2012

அருங்காட்சியகக் காட்சிகள்

ஐரோப்பியப் பயணத்தின்போது  எடுத்தப் புகைப்படங்கள் (தொடர்ச்சி)

லண்டனில் உள்ள மதாம் துஸே (Madame Tusseau)  மெழுகுக் காட்சியகக் காட்சிகள்.

 
 
 




பாரீஸ் லூவ்ரு அருங்காட்சியகக் காட்சிகள் கீழே:













 
 
 

Thursday, 13 September 2012

பிரஸ்ஸல்ஸ் அரண்மனைத்தோட்ட மலர்க்காட்சி

2008 -ஆம் ஆண்டு மேற்கொண்ட ஐரோப்பியச் சுற்றுப்பயணத்தின் போது நான் எடுத்த சில புகைப்படங்களைத் தொடர்ந்து பகிரவிருக்கிறேன்.


முதலில் பெல்ஜியத் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள அரண்மனைத் தோட்டத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.




 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 











 
 
 
 
 
 























 

Monday, 10 September 2012

உருவப் பொம்மை எரிப்பு


 

தமிழகத்து ஆர்ப்பாட்டங்கள் சிலவற்றில் உருவப் பொம்மை எரிப்பது உண்டு. அப்படி எரிப்பதற்கு அடிப்படைக் காரணம் என்ன என்பது எரிப்பவர்களுக்குத் தெரியுமா? ஐயம்தான்.
 
தாம் வெறுக்கிற ஒருவரை நேரடியாகத் துன்புறுத்துவதற்கு அஞ்சுகிற அல்லது  இயலாதவர்களுள் சிலர், அரை நூற்றாண்டுக்குமுன், மந்திரவாதியை அணுகினர்.
 
பணமும்  தகவலும் பெற்றுக்கொண்ட மந்திரவாதி ஒரு துணிப் பொம்மை செய்து தெய்வத்தின்முன்  வைத்து, மந்திரம் ஓதி, பூஜை செய்வார்.
 
பின்பு பொம்மையின்மீது சில இடங்களில் ஊசியால் குத்துவார். இது செய்வினை எனப்பட்டது. இதன் பயனாய்ப் பகைவர்  நோய்வாய்ப்பட்டுச் சங்கடப்படுவார் என்பது நம்பிக்கை.
 

பொம்மையை எரித்தால் அவர் இறந்தேவிடுவாராம். இப்போது மந்திரம் இல்லை ஆனால் செயல் நிகழ்கிறது, காரணம் தெரியாமலே.
 
(படம் உதவி ; இணையம்)