Wednesday 10 September 2014

மனைவியே மணாளனின் இயக்குநர்

நான்  இந்தியிலிருந்து  மொழிபெயர்த்து விரிவுபடுத்திய  குட்டிக்கதை)


    இளமையில்  அரியணை   ஏறிய  மன்னனொருவன்  இல்லறத்தில்  ஈடுபட   விரும்பித்  தனக்குத்  தகுதியான  அரச  குமாரியைத்  தேட  முற்பட்டபோதுமுதிய  அமைச்சர்  கூறினார்:

  "வேண்டாம்  அரசரே,    திருமணத்துக்குப்  பின்பு    நீங்கள்  சுதந்தரமாகச்   செயல்படமுடியாதுஅரசியின்   ஆலோசனைப்படி  நடக்க  வேண்டியிருக்கும்.

---  எப்படிச்  சொல்கிறீர்கள்  அமைச்சரேஇவ்வளவு  உறுதியாக?

--- அதுதானே  வழக்கம்.

---  நான்  நம்ப  மாட்டேன்.

---  ஒரு  சோதனை  செய்து  பாருங்கள்;   உண்மை   புலப்படும்.

---  அப்படியே  ஆகட்டும்."

  வேந்தன்  ஆணையிட்டவாறுநகரின்  அரச  மற்றும்   பிரபு  குடும்பத்தாருள்  திருமணம்  ஆனவர்கள்   உரிய  காலத்தில்   அரண்மனையில்   கூடினார்கள். ஏறக்குறைய  ஐம்பது   பேர்.

  " நீங்கள்  எல்லாரும்   கலியாணம்  செய்துகொண்டவர்கள்  தானே?

---  ஆம்,   அரசே.

--- சரிஉங்களில்மனைவி  சொல்லே    மந்திரம்  என  நினைத்துஅவளுடைய   பேச்சைக்   கேட்டு   நடப்பவர்கள்  அனைவரும்   என்  வலப்பக்கத்தில்  வந்து  நில்லுங்கள்;   சொந்தமாகச்  சிந்தித்து   செயல்படுபவர்கள்  எல்லாம்,   இடப் பக்கம்  நில்லுங்கள்என்னை  ஏமாற்ற  முயல்பவர்   கடுந்  தண்டனைக்கு  ஆளாவார்."

    மளமள  என்று  வலப்பக்கம்  போய்   நிற்கத்  தொடங்கினார்கள்ஒருவன்  மட்டும்சிறிது  நேரம்   தயங்கிவிட்டுஇடப்புறம்  நின்றான்.   அரசனுக்கு  வருத்தம்ஆடவர்  சொந்த  புத்தி  இல்லாமல்  வாழ்கிறார்களே!   கொஞ்சம்  ஆறுதல்ஒருவனாவது சுதந்தரமாக  இயங்குகிறானே!

  அவனிடம்    சொன்னான்:

 "உன்னைப்   பாராட்டுகிறேன்;   நீ   எதையும்   உன்  அறிவுப்படி  யோசித்துத்   தானே  செய்கிறாய்?

 ---  இல்லை   மன்னா.

--- அப்படியானால்?

---   என்  மனைவி சொல்தான்  என்  வழிகாட்டி.

---   பின்   ஏன்  அவர்களோடு  சேரவில்லை?

---  கூட்டத்தில்   நிற்கக்  கூடாது  என்று  அவள்   சொல்லியிருக்கிறாள்."

                              ======================= 

(படம்: நன்றி இணையம்)

7 comments:

  1. வணக்கம்
    ஐயா.

    சிறப்பான கதை மூலம் குடும்பத் தலைவியின் சொல்லை கேட்டு நடக்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. பாராட்டிப் பின்னூட்டம் தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி .

      Delete
  2. ஏற்கனவே கேட்ட கதைதான் என்றாலும் உங்கள் மொழியில் சிறப்பு பெறுகிறது.

    ReplyDelete
    Replies
    1. தெரிந்த கதைதானே என்று அலட்சியப்படுத்தாமல் வாசித்துப் பின்னூட்டம் அளித்த உங்களுக்கு என் அகமார்ந்த நன்றி .

      Delete
  3. நானும் அந்த தனித்து நிற்பவன் போல் தான் சார், ஆனால் என்ன ஒண்ணு என் மனைவியும் என்னை கூட்டத்தோடு நிற்காதே என்று சொல்லியிருக்க வேண்டும் :(

    ReplyDelete
  4. மனைவி சொல்லுவதற்கு இடம் வைக்காமல் நடந்துகொள்கிற நீங்கள் பாராட்டுக்கு உரியவர்தான் .உங்கள் பின்னூட்டத்துக்கு எனது உள்ளம் நிறை நன்றி .

    ReplyDelete
  5. அருமையாக மொழியாக்கம்+ விரிவாக்கம் செய்து என்னைச் சிரிக்க வைத்தமைக்கு நன்றி!

    ReplyDelete