Friday 24 May 2013

கலித்தொகை

 
சங்க நூல்களுள் ஒன்றென நம்பப்பட்ட கலித்தொகை, பிற்கால நூல் என்று திறனாய்வாளர் தெரிவிக்கின்றனர்.  
 
காரணங்கள்:
 
1 - சங்க நூல்கள் யாவும் அகவல்பாவால் ஆக்கப்பட்டிருக்க இது கலிப்பாவால் இயன்று வேறுபடுகின்றது. 
 
2 - முந்தைய அகத் திணை நூல்கள் இயல்பான காதலைப் பாடுகின்றன; அன்புடை நெஞ்சம் தாங் கலந்தன என்றபடி நிபந்தனை ஏதுமின்றி மனக் கலப்பு நிகழ்ந்தது. கலித்தொகையோ காளையை அடக்கவேண்டும் என்று விதிக்கிறது. 
 
" ஏறு தழுவினவர் அல்லாத எவரும் இவளை அடைய முடியாது என எல்லாரும் கேட்கும்படி பல தடவை அறிவிக்கப்பட்டவள் என்று தலைவி சுட்டப்படுகிறாள்.( பா - 2 ) 
 
கொல்லேற்றுக் கோடுஅஞ்சு வானை மறுமையும்
புல்லாளே ஆய மகள் (பா 3) 
 
பொருள்: ஏற்றுக் கோடு - காளையின் கொம்புகள் ; புல்லாளே - தழுவாளே. 
 
3 - பிற்காலப் புராணச் செய்தியைக் காண்கிறோம்: கைலை மலையை இராவணன் தூக்க முயன்றான். (38 )

இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை யந்தணன்
உமை யமர்ந் துயர்மலை இருந்தனனாக
ஐயிரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப்பொலி தடக்கையிற் கீழ்புகுத் தம்மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல........
4 - பாலியல் வன்முறையும் அறம் தான் என்ற கருத்து இடம்பெற்றுள்ளது:
 "வௌவிக் கொளலும் அறன்" (62) 

5 - பழைய நூல் எதுவும் சொல்லாத மாற்றுத் திறனாளிகள் இருவரின் ஊடலுங் கூடலும் விவரிக்கப்படுகின்றன. (94) 
 
இதன் காலம் 6 ஆம் நூற்றாண்டு எனக் கணித்தனர் ஆராய்ச்சியாளர்.
+++++++++++++++++++++++++++++++++

3 comments:

  1. அருமை... விளக்கத்திற்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  2. தகவலுக்கு நன்றிங்க

    ReplyDelete
  3. இலக்கியச் சாரலில் கரைந்தேன்..

    ReplyDelete