Saturday 22 June 2013

கலித்தொகைக் காட்சி - 1


மூன்று காட்சிகளைக் கலித்தொகையிலிருந்து எடுத்துக் காட்டுவேன் ; பழைய இலக்கியத்தைப் படிக்க விரும்பியும் இயலாதவர்களுக்குப் பயன்படலாம்:

பழைய அக நூல்களுள் பாலைநிலம் வர்ணிக்கப்படுகிறது. பாலை என்றதும் சகாராவை நினைத்துக்கொள்ளாதீர்கள். தமிழகப் பாலை, மழை இன்றி வறண்டு கிடக்கும் பகுதி; மழைவளம் பெற்றால் புத்துயிர் எய்தும்.




கலித்தொகை 10 ஆம் பாட்டின் வர்ணனையில் பொருத்தமான உவமைகள் அடுக்கி வருவது ஓரழகு:

மரங்கள் நிற்கின்றன: வறுமை வாய்ப்பட்ட இளைஞனின் தோற்றம் போல் வாடிய கிளைகள்;

கருமியின் செல்வம் போலச் சேர்ந்தார்க்கு நிழல் தரவில்லை; பிறர்க்குத் தீமை இழைத்துப் பழி கொண்டான் இறுதிக் காலத்தில் அவனும் குடும்பமும் கெடுவது போன்று வேரும் கிளைகளும்  வெம்பின. கொடுங்கோல் அரசனின் குடை நிழலில் பரிதாப வாழ்க்கை நடத்தும் குடிகளைப் போல உலர்ந்துபோன மரங்களை உடைய பாலை:

பாட்டை வாசித்து ஒலியின்பம் நுகரலாம்:

வறியவன் இளமைபோல் வாடிய சினையவாய்ச்
சிறியவன் செல்வம்போல் சேர்ந்தார்க்கு நிழலின்றி
யார்கண்ணும் இகந்துசெய்து இசைகெட்டான் இறுதிபோல்
வேரொடு மரம்வெம்ப ...

இதை உந்துதலாய்க் கொண்டு ஆண்டாள் பாடினார்:

ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் ...

என்று அவர் மேகத்திடம் வேண்டினார் . (திருப்பாவை - 4 )


4 comments:

  1. Replies
    1. நல்லது ஐயா.... நன்றி...

      http://dindiguldhanabalan.blogspot.com/2013/06/Speak-Clearly-and-Understand.html

      வாசிக்க நேரம் கிடைத்தால் நன்றி...

      ஒரு முறை எந்தப் பகிர்வுக்கும் வருவதில்லை... நட்பு தொடர்க... நன்றி....

      Delete
  2. பாலைநிலத்தின் கொடுமையைக் காட்டும் தேர்ந்த உவமைகளுடனான கலித்தொகைப் பாடலை அறியத்தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete