காட்சி - 4
இடம்: வீடு.
பாத்திரங்கள்
-- திபோ, பாத்லேன், கீய்மேத்.
திபோ -- வழக்குரைஞர்
ஐயா!
பாத்லேன் -- மறுபடியும்
வந்துவிட்டார்.
கீய்மேத். -- இல்லை,
வேறு ஆள்.
பாத்லேன் -- கர்த்தர்
உன்னைக் காக்கட்டும்; என்ன விஷயம்?
திபோ -
சங்கடத்தில் இருக்கிறேன்; நீங்கள் உதவ வேண்டும்.
என் எஜமானர் வழக்கு போட்டிருக்கிறார்;
அவருடைய ஆடுகளை ரொம்ப காலமாக மேய்த்துப் பராமரித்து வந்தேன்; ஆனால் அவர் குறைவாய்க்
கூலி தந்தார்.
பாத்லேன் -- யார் உன்
எஜமானர்?
திபோ -- துணிக்
கடைக்கார ழெரோம்.
பாத்லேன் -- ஆ! அவரா! கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கிறது. சரி, இருக்கட்டும். சொல்லு.
திபோ -- எல்லாவற்றையும்
சொல்ல வேண்டுமா?
பாத்லேன் -- கண்டிப்பாக; வழக்குரைஞரிடம்
எதையும் மறைக்கக்கூடாது.
திபோ -- சில ஆடுகளை நான் கொன்று தின்றது உண்மை. அவை
ஆரோக்கியமாகவும் வலுவாயும்தான் இருந்தன. பெரியம்மையால் இறந்ததாய் அவரிடம் சொன்னேன். அவர், "ஐயோ! நோய் ஆட்டை மற்ற ஆடுகளோடு சேர விடாமல் நீக்கு" என்றார். நானும்
அப்படித்தான் செய்தேன், ஆனால் வேறு விதமாய்:
அதாவது சமைத்து சாப்பிட்டேன். இப்படிப் பல தடவை; அவருக்கு சந்தேகம் வந்து ஆள் வைத்து ஒற்று பார்த்துக் கையும் ஆடுமாய்ப் பிடித்துவிட்டார். அவருடைய கட்சி வலுவானது என்று எனக்குத் தெரியும்; நீங்கள் வாதாடி என்னை மீட்க வேண்டும். என்னிடம்
போதுமான பணம் இருக்கிறது.
பாத்லேன் -- அப்படியா? உன்னிடம் வசதி உண்டா?
எவ்வளவு கொடுப்பாய், எதிர்க் கட்சியை நீர்த்துப் போகச் செய்து உன்னைக் காப்பாற்றினால்?
திபோ -- காசாய்த் தரமாட்டேன்; வெள்ளி நாணயம் பெறுவீர்கள்.
பாத்லேன் -- அப்படியானால், நீ வென்றாய்; எவ்வளவு மோசமான கேஸ் என்றாலும் என் வாதத் திறமையால் உடைத்துவிடுவேன். எத்தனை ஆடு அவரை இழக்கச் செய்தாய்?
திபோ -- மூன்று
ஆண்டில் பத்துக்குமேல் இருக்கலாம்.
பாத்லேன் - அவருக்கு சாட்சி
கிடைக்குமென்று நினைக்கிறாயா?
திபோ - நமக்கு ஒன்று கிடைத்தால் அவருக்கு நான்கு அகப்படும்.
பாத்லேன் -- இது நமக்குப்
பெரிய பலவீனம். எனக்கு ஒரு யோசனை: நான் உன்
வழக்குரைஞர் என்பதையோ நாம் சந்தித்ததையோ காட்டிக்கொள்ளாமல் நான்
மறைத்துவிடுவேன்.
திபோ -- அது எப்படி
முடியும்?
பாத்லேன் -- முடியும். நீ பேசினால், கேள்விமேல்
கேள்வி கேட்டு, உன்னை மடக்கிக் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்துவிடுவார்கள்;
அதனாலே, நீ என்ன செய்ய வேண்டுமென்றால், உன்னிடம் எந்தக் கேள்வி
கேட்டாலும், 'பே!'
என்பதைத் தவிர நீ
வேறொன்றும் சொல்லக்கூடாது. எரிச்சல் அடைந்து உன்னைக் கீழ்த்தரமாக வைதாலும், நீதிமன்றத்தை அவமதிப்பதாகக் குற்றம் சுமத்தினாலும், 'பே!' என்றே சொல்லு; வேறு வார்த்தை உன்
வாயிலிருந்து வரக்கூடாது, ஜாக்கிரதை! மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்.
திபோ-- அப்படியே சொல்லுவேன்
என்று உறுதி கூறுகிறேன்.
பாத்லேன் --- நானே உன்னிடம்
ஏதாவது கேட்டாலும் வேறு பதில் சொல்லாதே.
திபோ -- மாட்டவே மாட்டேன்; நீங்கள் கற்றுக்கொடுத்தபடி, 'பே!' அல்லாமல் வேறில்லை.
பாத்லேன் -- இதனால்
வாதி நிலை குலைந்து போவார்; நீ தப்பிப்பாய். எனக்குக் கட்டணம் நான் திருப்தி படும்படி கொடு. என்ன சம்மதமா?
திபோ -- பே!
பாத்லேன் -- அப்படி நீதிமன்றத்தில்
சொல்லு; இங்கேயல்ல.
திபோ -- கட்டணம் கொடுக்காவிட்டால்
நான் மனிதனேயல்ல.
பாத்லேன் -- பத்து
மணிக்கு விசாரணை தொடங்கும். நான் முன்கூட்டியே போய்விடுவேன்; நீ அப்புறமாக வா.
இரண்டு பேரையும் ஒன்றாக யாரும் பார்த்துவிடக்கூடாது.
திபோ -- சரிங்க, நீங்கள் எனக்காக வாதாடப்
போகிறீர்கள் என்பது தெரியக்கூடாது; அப்படித்தானே?
பாத்லேன் --
புத்திசாலி! வாதிக்கு ஓட்டம் நிச்சயம்.. நீ எனக்குக் கணிசமாகப் பணம் கொடுக்க
வேண்டும்.
திபோ -- அது பற்றி சந்தேகமே வேண்டாம்.
(போகிறான்)
பாத்லேன் -- (தமக்குள்)
மூன்று வெள்ளியாவது தருவான்.
++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)
//பாத்லேன் -- இதனால் வாதி நிலை குலைந்து போவார்; நீ தப்பிப்பாய். எனக்குக் கட்டணம் நான் திருப்தி படும்படி கொடு. என்ன சம்மதமா?
ReplyDeleteதிபோ -- பே!//
மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. தொடரட்டும். :)
நன்கு சுவைத்துப் பாராட்டியுள்ள உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி .
Deleteபள்ளியில் படிக்கும் போது இந்தக்கதை நாடகமாக நடிக்கப்பட்டு அதில் நானும் நடித்திருக்கிறேன் ஆங்கிலத்தில் இருந்தது
ReplyDeleteஅப்படியா ? மகிழ்ச்சி . மூலம் எது என்பதைப் பலர் குறிப்பதில்லை .விக்தோர் உய்கோவின் பிரஞ்சு புதினத்தின் ஒரு சிறு பகுதி பாடப் புத்தகத்தில் நாடகமாகத் தரப்பட்டது . அடைக்கலம் தந்த பாதிரியாரிடமே திருடியவனைப் பற்றிய கதை .மூலம் பிரஞ்சு என்பது இடம் பெறவில்லை .பின்னூட்டம் எழுதிய உங்களுக்கு என் அகம் நிறைந்த நன்றி .
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteகதை மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. தொடருங்கள். தொடர்கிறேன்.
ReplyDeleteஊக்குவிக்கும் பின்னூட்டம் எழுதியமைக்கு உள்ளமார்ந்த நன்றி .
Delete