Sunday 3 June 2012

சொஃபுக்ளீசின் எலெக்த்ரா - 2




( க்ளித்தெம்நேஸ்த்ராவின் நண்பர் அனுப்பிய தூதர் எனத் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவர், தேர்ப் பந்தய விபத்தில் ஒரேஸ்த்தஸ் மாண்டுவிட்டதாய்த் தெரிவித்தார்.)



க்ளித்தெம்நேஸ்த்ரா --  

அன்றுமுதல்

 அவனென் முகத்தைப் பார்த்தறியான் என்றாலும்

 தந்தையின் சாவுக்கு என்மீது பழிசுமத்தி

 சூளுரைத் திருந்தான் என்னைத் தண்டிக்க.

 இங்கே யதனால் இரவும் பகலும்

 கிடந்தேன் உறங்காமல் காலத்தின் கைதியாய்

 மெல்ல நெருங்கும் இறப்பை எதிர்நோக்கி.

 விடுதலை என்றனுக்கு இப்போது; விடுதலை

 அவனைப் பற்றிய அச்சத்தில் இருந்து.

 என்னமைதியை அதிகமாய்க் கெடுக்கின் றவள்,

 என்னித யத்தின் செம்மதுவை உறிஞ்சும்

 பாம்பாம் இவளிடம் இருந்து மேதான்.

 இவளது மிரட்டலுக் கிடமின்றிப் போயிற்று.

 இனிநான் வாழலாம் அமைதியாய்.



எலெக்த்ரா - நீதி யாகுமா இது?



க்ளித்தெம்நேஸ்த்ரா - நீதி, வழங்கி யாயிற்று அவனுக்கு.

இன்னம் இல்லை உனக்கு.



எலெக்த்ரா - பழிக்கான தேவதையே! கேள்.

பேசு மடிந்தவனுக்காக.



க்ளித்தெம்நேஸ்த்ரா -- அதுமிக விஸ்வாசமாய்க் கேட்டுவிட்டது;

நன்றாயும் பேசிவிட்டது.

No comments:

Post a Comment