நிமிர்ந்த
இனத்திலிருந்து 2 ல/ஆ/மு பரிணமித்தது ஹொமோ செப்பியன்ஸ் (Homo sapiens); செப்பியன்ஸ்
= புத்திசாலி. இதன் பிரிவுகள்
இரண்டு:
1 --- ஹொமோ செப்பியன்ஸ்
நீயெண்டெர்த்தாலென்சிஸ்
-- நீயெண்டெர்த்தால்கள்
35,000 ஆ/ முன்வரை
மேற்கு ஐரோப்பாவில் வாழ்ந்தார்கள் என்பதை
அறிவோம்.
2 --- நவீன
ஹொமோ
செப்பியன்ஸ் (Modern Homo
sapiens) -- கிழக்காப்ரிக்காவில்
தோன்றி அக்
கண்டத்தின் வட பகுதியிலும் மேற்காசியாவிலும் ஒரு
ல/ஆ/மு
பரவினர். மேற்காசியாவில்தான், இஸ்ரேலின் கலிலீ
(Galilee) பகுதியில்,
நாசரேத் அருகில், கஃப்ஜேஹ் (Qafzeh)
குகையில், நவீனமனிதர்களின் மிகமிகத்
தொன்மையான எலும்புக் கூடுகள் அகப்பட்டன. அங்கு ஓர் இளம்பெண்ணும் அவளின்
காலடியில் ஆறு
வயதுக் குழந்தையும் புதைக்கப்பட்டிருந்தனர்.
ஏறக்குறைய ஒரு ல/ஆ பழமையான
புதையல் அது. 1933 இல், ஐந்து மனிதக்
கூடுகளும் பின்பு
1965 க்கும்
1975 க்கும் இடையில், பிரான்சு நாட்டு பெர்நார் வாந்தேர்மீர்ஷ் (Bernard Vandermeersch) எனும் தொல்வரலாற்று நிபுணரால்
பதின்மூன்றும்
அகழ்ந்தெடுக்கப்பெற்றன. வயது வந்தோரும்
குழந்தைகளுமாக
எல்லாரும்
புதையுண்டிருந்தனர்.
இந்த மாதிரி
இடுகாடுகள் பிரான்சு, இத்தாலி, மத்திய ஆசியா, பாலஸ்தீனம்
ஆகிய பிரதேசங்களில் காணப்பட்டன. இராக்கின் ஷனிடர் (shanidar) குகையில் ஒன்பது
கூடுகள் வெவ்வேறு
ஆழங்களில் கிட்டின; அவற்றுள் அதிகப் பழையதற்கு
வயது 70,000 ஆண்டு.
க்ரோ
மஞ்ஞோன் இனம், 'முற்பட்ட ஹொமோ
செப்பியன்ஸ் செப்பியன்ஸ்' என்பதையறிவோம்.
இப்போது உலகம் முழுதும் வாழ்கின்ற இனம் ஹொமோ செப்பியன்ஸ்
செப்பியன்ஸ் எனப்படுகிறது.
இதுவும் கிழக்கு
ஆப்ரிக்காவில் பிறந்தது; ஒரு லட்சத்திலிருந்து ஒன்றேகால்
லட்சம் ஆண்டுகளுக்கிடையே அந்தக் கண்டத்தை விட்டு
அது
வெளியேறியிருக்க வேண்டும்.
மனிதர்களை வெள்ளை
இனம், கருப்பினம், மங்கோலிய இனம், சிவப்பினம் எனப் பிரிப்பது இருபதாம் நூற்றாண்டுவரை
வழக்கத்தில் இருந்தது; ஆராய்ச்சி விரிவடைய அடைய,
'யாவரும்
ஓரினம், வசித்த இடம், தட்பவெப்ப
நிலை, சூழல் முதலானவற்றின் வேறுபாடும் மாறுபாடுமே
அவர்களின்
தோற்ற
வித்தியாசங்களுக்குக் காரணம்' என்பது
இறுதி முடிவாய்
ஏற்கப்பட்டுள்ளது.
 |
சிம்பன்சி |
மானிடர்
வரலாற்றைச் சுருக்கமாகக் கூறலாம்:
ஒரு
பொது மூதாதை - பெருங்குரங்கு
அதிலிருந்து ஒரு கிளை : பரிணாமம்
உற்ற பெருங்குரங்குகள்; அதிலிருந்து கிபன், ஒராங் உட்டான், கொரில்லா, சிம்பன்சி.
மறு
கிளை: ஆசைன்கள்; அதிலிருந்து ஹொமோ ஹெபிலிஸ், ஹொமோ
இரேக்டஸ், ஹொமோ செப்பியன்ஸ்.
பற்பல
நாட்டு
அறிவியல் வல்லுநர்கள் கஷ்டம்
பாராமல், காலங் கருதாமல், கடுமையாய்
உழைத்து, ஆராய்ந்து, மனிதர் தோன்றிய வரலாற்றை
அறிந்து கூறியிருக்கிறார்கள்; அவர்கள் ஹோமரின்
இதிகாசங்களிலோ ஷேக்ஸ்பியரின்
நாடகங்களிலோ தகவல்
திரட்டவில்லை; அறிவியல் முறைப்படி, பல்லாண்டு களப்பணி செய்து, கைக்கெட்டிய பொருள்களை அளந்து, ஒப்பிட்டு, காலம் நிர்ணயித்து, ஊகித்து, கலந்தாலோசித்து, விவாதித்து, முடிவுக்கு வந்தார்கள். அவர்கள் பின்காணும் வெவ்வேறு அறிவியல்
துறைகளில் நிபுணர்கள்:
-- மண்ணூல். Geology
--அகழ்வு
ஆய்வியல். Archaeology
--புதைபடிவ
ஆய்வியல் . Palaeontology
-- மானிட
இயல். Anthropology
--விலங்கு இயல்.
-- தாவர
இயல்.
- இயற்கை
இயல்.
-- உடற்கூற்று இயல். Anatomy
-- மரபணு இயல். Genetics
-- வேதியியல்.
Chemistry
-- இயற்பியல்.
Physics
--- புவி
இயல். Geography
ஆராய்ச்சிகள்
தொடர்கின்றன: 29 - 5 - 15 இந்து ஆங்கில
நாளிதழில் ஒரு செய்தி:
"வடக்கு
ஸ்பெய்னில் 43 ல/ஆ/முந்தைய, கிட்டத்தட்ட
முழுமையான, எலும்புக் கூடொன்று கிடைத்துள்ளது; 13 மீட்டர்
செங்குத்து ஆழத்தில் மேற்கொண்டும் கூடுகள்
காணப்படுகின்றன எனவும் குறைந்தது
28 இருக்கலாம் எனவும் ஆய்வர்கள்
தெரிவித்தார்கள்."
ஆகவே, புதுக்கருத்து தோன்றலாம்,
பழையது, தவறு எனக் கைவிடப்படலாம் அல்லது
உறுதியுறலாம். எதுவானாலும் அடிப்படைக் கண்டுபிடிப்பான 'குரங்குதான்
மனிதனின் மூலம் ' என்பது
மாறாது.
மனிதனுக்கும்
சிம்பன்சிக்கும் பொதுவான மூதாதை பற்றிய
முடிவு நன்கு
வேரூன்றிவிட்டது; 1960 இலிருந்து செய்த டி.என்.ஏ (DNA) மற்றும் மூலக்கூறு ஆய்வுகள் மனிதர்களும்
சிம்பன்சிகளும்
ஒரே குடும்ப உறுப்பினர்கள்
என்று உறுதிப்படுத்தியுள்ளன.
பழங்காலத்தைக் குறித்த எல்லாக் கோட்பாடுகளும்
எலும்பாராய்ச்சியால்
மட்டுமே பெறப்பட்டவையல்ல; மரபணு, தட்ப வெப்பம், சுற்றுச் சூழல், பிற விலங்குகள்
முதலானவற்றின் ஆய்வாலுந்தான். புதையெலும்பு
ஆய்வர்
எலும்புகளைத் தேடுகிறார்; எங்கே தோண்டவேண்டும் என்பதை
ஊகிக்கிறார் மண்ணூலார்;
அகழ்வர்கள் தோண்டுகிறார்கள்; வேதியியலாரும் இயற்பியலாரும்
எலும்புகளின் காலத்தைக் கணக்கிட,
மரபணு இயலார் செல்களில்
பரிணாம
வரலாற்றைக் காண்கிறார்.
பரிணாமம் பற்றிய கொள்கை
பலமாக நிலைபெற்றுவிட்டது.
மனிதப் பரிணாமம்
என்பது விலங்குத் தன்மை, கரடுமுரடு ஆகியவற்றிலிருந்து மேம்பாடு, பண்பாடு, நாகரிகம் நோக்கிய படிப்படியான
முன்னேற்றம் அல்ல;
வாழும் வழிகளைத் தேடி
மேற்கொள்ளப்பட்ட முடிவற்ற முயற்சிகள், எண்ணற்ற மற்றும் திரும்பத்
திரும்ப நடந்த சோதனைகள் (experiments) ஆகியவற்றின்
விளைவே பரிணாமம்; சாத்தியமான ஒவ்வொரு
திசையிலும் நிகழ்ந்த அந்தச் சோதனைகளே வாழ்வில்
நாம் பார்க்கிற
வேறுபட்ட தோற்றங்களுக்குக்
காரணம்.
வாழும்
உயிர்கள்
தலைமுறைக்குத் தலைமுறை பெரிய அளவிலோ சிறிய
அளவிலோ மாறிக்கொண்டிருக்கின்றன.
காட்டு: இரு தலைமுறைக்கு
முன்பு சிறுவர்களுக்கு
28 பற்கள்
இருந்தன; வாலிபத்தில் 4 கடைவாய்ப்
பற்கள் முளைத்தன; ஆக மனிதனுக்கு 32 பற்கள் எனக்
கணக்கிட்டோம்.
இன்றைய இளைஞர்களுக்கு அவை முளைக்காமையால் 28 தான்.
நம்
குறுகிய
ஆயுட்காலத்தில் எல்லா
மாற்றங்களையும் அறிய
முடிவதில்லை.
புறப்பொருள் வெண்பா மாலை என்றோர் இலக்கண
நூல் உண்டு; சங்க காலத்துக்குப் பிற்பட்ட அதில்,
உதாரணத்துக்காகப் பாவொன்று
காட்டப்பெற்றுள்ளது:
கல்தோன்றி
மண்தோன்றாக் காலத்தே வாளோடு
முன்தோன்றி
மூத்த குடி.
என்று தமிழ்க் குடியின்
பழமையை அது பறைசாற்றுகிறது. பிறக்கும்போதே
வாள்
வைத்திருந்ததாம்! இடுப்பில் தொங்கியதா அல்லது கையில்
பிடித்திருந்ததா என்பது சொல்லப்படவில்லை.
புலவரின் கற்பனை
எனப் பாராட்டலாமே
யொழிய வரலாற்று
உண்மையெனக் கொண்டு ஆதாரமாய்க் காட்டுதல்
தவறு. முன் தோன்றியது ஆப்ரிக்கக்
குடியே! அதுவும் மண்
தோன்றாக்காலத்தில் அல்ல; கல் தோன்றி, மண் தோன்றி, மணல் தோன்றி, ஒரு செல்லுயிர்
தோன்றி, பல செல்லுயிராய்ப்
பரிணமித்து, கணக்கற்ற உயிரினங்கள் உருவாகிப் பெருகிப்
பரவிப் பாரை
நிறைத்ததற்குப் பல
நூறாயிரம் ஆண்டுக்குப்
பின்னர்! எடுத்துக்காட்டாக,
பாம்புகள் ஊரத்
தொடங்கியது 13 கோடி
ஆண்டுகளுக்கு முன்பு; மானிடர் வந்து சில
லட்ச வருடங்களே ஆயின.
முற்றிற்று.
++++++++++++++++++++++++++