போல் வெர்லேன் ( Paul Verlaine ) 19 ஆம் நூற்றாண்டுப் பிரெஞ்சுக் கவிஞர்களுள் ஒருவர். வாழ்க்கையில் துன்பங்களையும், ஏமாற்றங்களையும் அனுபவித்தவர். அவரது சோகக்கவிதையொன்றின் நேரடி மொழிபெயர்ப்பைக் கீழே படிக்கலாம்:
அழுகை பெய்கிறது இதயத்துக்குள்
ஊரிலே மாரி ஊற்றுவது மாதிரி.
என்றன் இதயத்தைத் துளைக்கின்ற
அந்த ஒடுக்காற்றல்தான் என்ன?
தரைமீதுங் கூரை மீதும்
மழையின் இதமான ஒலி!
மகிழ்ச்சியிழந்த நெஞ்சுக்கு
மழையின் தாலாட்டு!
தன்னையே வெறுக்கும் இந்த இதயத்தில்
பெய்கிறது அழுகை காரணம் இன்றி.
எதுவுமே புரியவில்லை.
இந்தத் துயருக்கு இல்லை காரணம்.
அன்போ பகையோ இல்லாமலே
துன்பம் எவ்வளவு மனத்துக்கு!
இது ஏன் என்பதை அறியாததைவிடப்
பெரிய துன்பம் வேறொன்றுமில்லை.
No comments:
Post a Comment